கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?
சரி அப்போ கடவுள் இல்லையா? இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.
சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய் என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.
எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம். அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.
நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.
Showing posts with label கடவுள். Show all posts
Showing posts with label கடவுள். Show all posts
Thursday, December 13, 2007
Friday, November 23, 2007
புரியாததுதான் கடவுளா?
கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நினைத்து நான் குழம்பிய குழம்பல்கள் இங்கே.
சரி. முதலில் கடவுள் இருக்கிறார் என ஏன் நம்பவேண்டும் என்ற காரணங்களைப் பார்ப்போம்.
1. மனித உடலை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்பும்? என்னதான் பரிணாம வளர்ச்சி அது இது என்றாலும் இவ்வளவு கனகச்சிதமாக எப்படி சாத்தியமாகும்?
2. உலகில் எவ்வளவு புராணங்களும் இதிகாசங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் பொய் சொல்கின்றனவா? நம் முன்னோர்கள் அந்த அளவு நம்மை ஏமாற்றுவார்களா என்ன?
3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்னால் ஓர் இளைஞர் யோகாசனத்தின் மூலம் புவி ஈர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் நிற்பதைக் காட்டினார்கள். சாதாரண நமக்குத் தெரிந்த யோகாவின் உதவியால் இந்த அதிசயங்களைச் செய்ய முடிகின்றதெனில், நமக்குத் தெரியாத எவ்வளவோ கற்றிருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களால் வானத்தில் கூட பறந்திருக்க முடியும் அல்லவா?
ஏன் கடவுள் இல்லையென நினைக்க வேண்டும்?
1. கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றால் அவர் எல்லா மனிதர்களையும் சமமாக அல்லவா நடத்தவேண்டும். ஏன் சிலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் இருந்தால் அவர்களுக்கு உதவலாமே? ஏன் செய்வதில்லை.
மனிதன் என்பவனும் ஒரு விலங்குதான். ஆனால் அவனது வாழ்க்கைமுறை வேறு. அவனிடம் பணமில்லை எனவே கஷ்டப்படுகிறான். எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.
2. கொடுமையான மரணங்கள் ஏன் நடக்கின்றன. உதாரணம் கும்பகோணம் தீ விபத்து, ஏர்வாடி தீ விபத்து. சாதாரண மனிதர்களாலேயே தாங்க முடியாத அந்த நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன? அதே போல் கோவிலுக்குச் சென்று திரும்பும் போதும் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? தன்னைத் தரிசிக்க வந்தவனை பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது கடவுளின் பொறுப்பல்லவா?
இவையும் தனிமனிதனின் கவனக்குறைவாலும், தற்செயலாகவும் நிகழ்பவை. எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
3. இந்து சமயத்தில் (பிற சமயங்களிலும்) ஏன் இவ்வளவு சாதிப்பாகுபாடுகளும் சக மனிதனை இழிவாக சித்தரிக்கும் நிலையும் உள்ளது? கடவுள் இருந்தால் ஒரு வார்த்தை "என் முன் எல்லோரும் சமம். சாதிப் பாகுபாடுகள் கூடாது" என்று சொன்னால் அவரைத் தொழுபவர்கள் கேட்டுக் கொள்வார்களே? ஏன் செய்வதில்லை?
அட போப்பா! கடவுள் என்பதே மனிதன் தோற்றுவித்தது தான். அப்புறம் எப்படி கடவுள் வந்து நேரில் சொல்வார்?
4. நல்லவர்கள் கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து முடிவதும், கெட்டவர்களும் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் சொகுசாகப் புகழோடு வாழ்வதும் ஏன்?
பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். கடவுளாம் மண்ணாங்கட்டி.
5. உலகத்தில் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன? எந்தக் கடவுள் உண்மை? இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என்றல்லாம் சொல்கிறார்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவனுக்கு ஒரு சொர்க்கம், கிறிஸ்தவருக்கு தனி சொர்க்கமா?
வெளங்கிரும்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து கடவுளை நாம் எப்படி define செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.
சரி. முதலில் கடவுள் இருக்கிறார் என ஏன் நம்பவேண்டும் என்ற காரணங்களைப் பார்ப்போம்.
1. மனித உடலை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்பும்? என்னதான் பரிணாம வளர்ச்சி அது இது என்றாலும் இவ்வளவு கனகச்சிதமாக எப்படி சாத்தியமாகும்?
2. உலகில் எவ்வளவு புராணங்களும் இதிகாசங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் பொய் சொல்கின்றனவா? நம் முன்னோர்கள் அந்த அளவு நம்மை ஏமாற்றுவார்களா என்ன?
3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்னால் ஓர் இளைஞர் யோகாசனத்தின் மூலம் புவி ஈர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் நிற்பதைக் காட்டினார்கள். சாதாரண நமக்குத் தெரிந்த யோகாவின் உதவியால் இந்த அதிசயங்களைச் செய்ய முடிகின்றதெனில், நமக்குத் தெரியாத எவ்வளவோ கற்றிருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களால் வானத்தில் கூட பறந்திருக்க முடியும் அல்லவா?
ஏன் கடவுள் இல்லையென நினைக்க வேண்டும்?
1. கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றால் அவர் எல்லா மனிதர்களையும் சமமாக அல்லவா நடத்தவேண்டும். ஏன் சிலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் இருந்தால் அவர்களுக்கு உதவலாமே? ஏன் செய்வதில்லை.
மனிதன் என்பவனும் ஒரு விலங்குதான். ஆனால் அவனது வாழ்க்கைமுறை வேறு. அவனிடம் பணமில்லை எனவே கஷ்டப்படுகிறான். எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.
2. கொடுமையான மரணங்கள் ஏன் நடக்கின்றன. உதாரணம் கும்பகோணம் தீ விபத்து, ஏர்வாடி தீ விபத்து. சாதாரண மனிதர்களாலேயே தாங்க முடியாத அந்த நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன? அதே போல் கோவிலுக்குச் சென்று திரும்பும் போதும் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? தன்னைத் தரிசிக்க வந்தவனை பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது கடவுளின் பொறுப்பல்லவா?
இவையும் தனிமனிதனின் கவனக்குறைவாலும், தற்செயலாகவும் நிகழ்பவை. எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
3. இந்து சமயத்தில் (பிற சமயங்களிலும்) ஏன் இவ்வளவு சாதிப்பாகுபாடுகளும் சக மனிதனை இழிவாக சித்தரிக்கும் நிலையும் உள்ளது? கடவுள் இருந்தால் ஒரு வார்த்தை "என் முன் எல்லோரும் சமம். சாதிப் பாகுபாடுகள் கூடாது" என்று சொன்னால் அவரைத் தொழுபவர்கள் கேட்டுக் கொள்வார்களே? ஏன் செய்வதில்லை?
அட போப்பா! கடவுள் என்பதே மனிதன் தோற்றுவித்தது தான். அப்புறம் எப்படி கடவுள் வந்து நேரில் சொல்வார்?
4. நல்லவர்கள் கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து முடிவதும், கெட்டவர்களும் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் சொகுசாகப் புகழோடு வாழ்வதும் ஏன்?
பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். கடவுளாம் மண்ணாங்கட்டி.
5. உலகத்தில் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன? எந்தக் கடவுள் உண்மை? இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என்றல்லாம் சொல்கிறார்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவனுக்கு ஒரு சொர்க்கம், கிறிஸ்தவருக்கு தனி சொர்க்கமா?
வெளங்கிரும்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து கடவுளை நாம் எப்படி define செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.
Subscribe to:
Posts (Atom)