Showing posts with label மின்சாரம். Show all posts
Showing posts with label மின்சாரம். Show all posts

Saturday, April 16, 2011

இலங்கைக்கு தமிழகம் மின்சாரம் - திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் !!!

காங்கிரஸ் அரசுக்கு தமிழர்களும், தமிழ்நாட்டவர்களும் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. தினம் தினம் எங்கள் ஊர் மீனவர்களைக் கொன்று கொண்டிருக்கும் சிங்களநாய்களுக்கு நம் தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதைக் கடல் வழியாகவே இலங்கை கொண்டு செல்கிறார்களாம்.

பார்க்க - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224804

!@#$. இதற்கு திமுகவும் துணை போவதுதான் கொடுமை. கருணாநிதி அவர்களே இதற்கு மேல் நீங்கள் செய்யும் இனத்துரோகம் என்னவாக இருக்கும்? சிங்களநாய்கள் ஈழத்தை முழுவதும் ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பது பத்தாது என்று, கடைத்தேங்காயை எடுத்துக் கொடுத்தது போல இப்போதைய மீனவர் பிரச்சினைக்கு முழுக்காரணமாக இருக்கும் தமிழகத்தின் கச்சத்தீவை அப்பன் வீட்டுச் சொத்தைப்போல் எடுத்துக் கொடுத்துவிட்டு, இப்போது மீனவர்கள் கொல்லப்படும் போதும் காங்கிரஸ் பேய்கள் வாய்மூடி இருப்பதும், இப்போது தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதை சிங்களநாய்களுக்கு வழங்குவதும் எவ்விதத்தில் நியாயம்?

கடல் மூலம் மின்சாரம் வழங்க முதல்கட்ட சோதனை முடிந்து, மண் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். இங்கிருப்பதை எடுத்து நம் எதிரிக்குக் கொடுப்பதில் காங்கிரஸ் !@#$$களுக்கு என்னதான் சந்தோசமோ?

இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு முழுவதும் துணை போகும் தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழக மீனவர்களைக் காக்க பதிவுலகம் போராடியது போல, நம்மால் முடிந்த அளவு பதிவுகள் எழுதி நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து பதிவர்கள் ட்விட்டர் மூலமும், நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பேனர்களைப் பதிவில் இட்டும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.