Showing posts with label கலாய்ப்பு. Show all posts
Showing posts with label கலாய்ப்பு. Show all posts

Tuesday, April 29, 2008

ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா & ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்



நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு 'சென்டிமென்ட் சர்மா' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

கொசுறு : நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)

-----XX-----

ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்


மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?


...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........

இது தான் காரணம் :)



மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்

எல்லா வினைக்கும் ...........


சரிசமமான எதிர்வினை உண்டு ......



மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சைமண்ட்ஸைக் கேட்டார்


ஹைடனைக் கேட்டார்


ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்



கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்






நன்றி :
சாம்
-----XX-----
அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!




Tuesday, February 19, 2008

பதிவுலக க்விஸ் மற்றும் 'ஒரு (தி)தொரட்டியின் கதை'



கீழே கொடுத்திருக்கும் கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொன்னா 'கண்ணம்மா' கார்த்திக் பிரபு ஆறு மாசம் முன்னால நடந்த போட்டியில் எனக்கு பரிசா அனுப்புறேன்னு சொல்லி இன்னமும் அனுப்பிக்கிட்டிருக்கிற 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்' அவர் அனுப்பியவுடன் பரிசாகக் கொடுக்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

நொந்தழல் கவின்னு அன்போட அழைக்கப்படுபவர்
1. செந்தழல் ரவி
2. வெந்தழல் பீவி
3. வெண்குழல் ஆவி

காண்டு கஜேந்திரன், பேண்டு பலராமன், புரளி மனோகர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி விளிக்கப்படுபவர்
1. டோண்டு ராகவன்
2. மாண்டு மாதவன்
3. நண்டு நாயகன்

அய்யனார் என்பவர்
1. திருவள்ளுவர்
2. விவேகானந்தர்
3. கவிஞர் கம் பதிவர்

ராசி ஏழுமலை என அழைக்கப்படுபவர்
1. காசி ஆறுமுகம்
2. ஓசி ஏறுமுகம்
3. பாசி பரமசிவம்

TBCD ன்னா என்னா அர்த்தம்?
1. Tamilnadu Born Confused Dravidan
2. Thailand Born Confused Dravidan
3. TuBerClosis Disease

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்புக்கு பதிவுலக உதாரணம்
1. டோண்டு - லக்கிலுக்
2. காண்டு - கோலி காண்டு
3. செந்தழல் - க.கந்தசாமி

பொருத்துக :

யோனி,குறி -- சுண்டக்கஞ்சி மீட்டிங்
துக்ளக் ஆண்டுவிழா -- ஓசை செல்லா
சோ,மோடி -- 200000 ஹிட்கவுண்ட்
போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- சூடான இடுகைகள்
ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- ஜோ,கோடி

கண்டுபிடிங்க :

மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?

************************************************************************

கீழே இருக்கும் கதை போன மாசமே எழுதினது. ஊர் நெலவரம் சரியில்லாததால் போடலை. அதுனால லேட் ரிலீஸ்.

ஒரு தொரட்டியின் கதை !

பதிவுபுரம்னு ஒரு ஊர்ல ராசி ஏழுமலை ன்னு ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு தொரட்டி செஞ்சு விக்கிறதுதான் வேலையாம். அவருக்கு தன்னோட தொரட்டி செய்யுற திறமை மேல ரொம்ப பெருமையாம். ஊருக்குள்ள நாலஞ்சு தொரட்டிக் கடை இருந்தாலும் அவர் கடையைத் தேடித்தான் ரொம்ப மக்கள் வருவாங்களாம்.

ஒருநாளு ஊருக்குள்ள பெரிய மனுசானாத் திரியிற பா.சவக்குமார் அசலூர் திருவிழாக்குப் போயி தொரட்டியைக் கண்டுபுடிச்சதே எங்க ஊர்ல தான்னு பெருமையா சொல்லிக்கிட்டாராம். அதை ஆயாவூட்டுக்கு ஓசி சோறு சாப்பிடப் போன மரமண்டு ஒன்னு விசயம் கேள்விப்பட்டு ஊருக்குள்ளாற வந்து சொல்லிருச்சாம்.

உடனே ராசி ஏழுமலை தொரட்டியைப் பத்தி சொன்னீங்களே அதைச் செஞ்சவனை ஏன் சொல்லலைன்னு பஞ்சாயத்தக் கூட்டிட்டாராம். பஞ்சாயத்துல ராசி ஏழுமலையைப் பிடிக்காத ஆளுங்கல்லாம் மூஞ்சியைப் பொத்தி முக்காடு போட்டுக்கிட்டு கூட்டத்தோட கூட்டமா சவுண்ட் விட்டாங்களாம். கூட்டத்துல ஓரமா உக்காந்திருந்த KULA(a)குளா மட்டும் "தொரட்டி செய்யிறதுல இல்லை சூட்சுமம்.. மக்கள் அத தொரத்தித் தொரத்தி வாங்குறதுல தான் இருக்கு"ன்னு தத்துவமா பேசினாராம். அப்புறமா ஊருக்குள்ள எவன் நல்லா கைநாட்டு வைக்கிறான்னு போட்டி வச்சி அவனுக்கெல்லாம் எருது தர்றேன்னு சொன்னோமே என்னய்யா இன்னமும் எருதையும் காணோம் கருதையும் காணோம்னு எவனும் எதிர் கேள்வி கேட்டுறுவான்னு நெனச்சிக்கிட்டு கமுக்கமா உக்காந்துக்கிட்டாராம். "இந்தாளுக்கு இதே வேலையா போச்சுய்யா தொரட்டி நான் தான் செஞ்சேன் நல்லா வெரைட்டியா செஞ்சேன்னு புலம்புறதே பொழப்பு. பிரச்சனையை சட்டுபுட்டுன்னு பேசி முடிங்கய்யா"ன்னு எகிறுனாராம் அன்லக்கிகுக்.

"தொரட்டியை சொன்னா என்னய்யா அத செஞ்சவனை சொன்னா என்னய்யா எப்படின்னாலும் அது ஒன்னுதான்யா. தொரட்டிதான் ராசி ஏழுமலை! ராசி ஏழுமலைதான் தொரட்டி!"ன்னு திருவிளையாடல் வசனத்தைச் சொல்லி பஞ்சாயத்தை பைசல் பண்ணினாங்களாம். இந்தப் பிரச்சனை இப்பக்குள்ள முடியாது எப்பவுமே பொகைஞ்சிக்கிட்டு தான் இருக்கும்னு அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டு கலைஞ்சி போனாங்களாம் ஊர்க்காரங்க.

************************************************************************

கதை புரியாதவுங்க கீழே இருக்கிற சுட்டிகளை படிங்க. புரிஞ்சாலும் புரியும்.

சன் செய்திகள் நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி !
மூன் டிவிக்கு ஒரு காக்கா கதை!
'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

யாரும் கோவிச்சிக்காதீங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன். குறிப்பா ராசி சாரி காசி சார் சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்புறம் என்னையும் 'யாரது? பதிவரா?'ன்னு கேட்டுறக்கூடாது ;) .

Friday, January 18, 2008

சுக்கு காபி வித் சுப்பிரமணி-யில் கண்மணி !

சுப்பிரமணி : இன்னிக்கு நாம நிகழ்ச்சியில் சந்திக்கப் போற பதிவர் யாருன்னு உங்க எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். ஏன்னா ஏற்கனவே எல்லா நாடகத்துக்கு இடையிலயும் ad போட்டுக் காட்டிட்டாங்க. எனவே வெல்கம் ஒன் அன் ஒன்லி ஒன் மொக்கைப் பதிவர் கண்மணீய்ய்ய்ய்ய்ய்.

சுப்பிரமணி : வணக்கம் கண்மணி டீச்சர் !

கண்மணி : வணக்கம் ச்சுப்பிரமணி ! நீங்க எங்க வீட்டு நாய் மாதிரியே பேசுறீங்க. அதோட பேரும் ச்சுப்பிரமணி தான்.

சுப்பிரமணி : ஓ சூப்பர்! நம்ம நேரா பேட்டிக்குக் போகாம கொஞ்சம் சுத்து வழியில இப்போ போலாம். உங்களோட பொழுதுபோக்கு எல்லாம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

கண்மணி : எனக்கு இருக்குறது எப்பவுமே ஒரே ஒரு பொழுது போக்குதான். அது வேலைக்குப் போறது.

சுப்பிரமணி : அப்போ உங்களோட ஃபுல் டைம் ஜாப் எது?

கண்மணி : பதிவு எழுதுறது.

சுப்பிரமணி : ஆமாம். நான் தான் மறந்துட்டேன். கும்மி, மொக்கைனா கூப்பிடு கண்மணியைங்கிற அளவுக்கு பதிவுலகில் பேர் வாங்கியிருக்கீங்க. இதுக்கெல்லாம் யார் காரணம் இந்த அளவுக்கு நீங்க பேர் வாங்குறதுக்கு நீங்க என்ன என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்கன்னு கொஞ்சம் விபரமா சொல்றீங்களா?

கண்மணி : முதலில் என் தலைமையில இயங்கும் பாசக்கார குடும்பம் என்கிற மக்கள் தொண்டு இயக்கத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.அவங்கதான் பதிவு போட்டவுடனே வரிசையாக் கியூ கட்டி நின்னு ஒவ்வொரு பின்னூட்டமாப் போட்டுத் தாக்கி என்னையே திக்குமுக்காட வச்சிருவாங்க. அப்புறமென்ன வழக்கம் போல கும்மிதான். ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறிக் கலாய்ச்சி பதிவை எங்கேயோ கொண்டு போய்ருவோம். இதுல என்ன வருத்தம்னா பதிவு போட்ட பத்து நிமிசத்துல 40 பின்னூட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை எட்டிரும் என்னோட பதிவுகள். அதுனால மத்தவுங்க படிக்கமுடியலைங்கிற வருத்தம் கொஞ்சம் இருக்கு.

அவ்வ்வ்வ்வ் எம்ஜியார் பாட்டுப் பாடி நாட்டுக்கு நல்ல சேதி சொன்னாரு நான் பதிவு போட்டு புவியை சூடாக்காதீங்க....மாம்பழம் சாப்பிடாதீங்க....ஜங்க் புட் சாப்பிடாதீங்க...அப்படின்னு எவ்ளோ நல்ல சேதி சொல்லியிருக்கேன்.

முதுமை வரமா சாபமா ன்னு மிரட்டியிருக்கேன்.நட்சத்திர வாரத்துல வாலை சுருட்டிகிட்டு நல்ல புள்ளையாட்டமா...பததிவு போட்டிருக்கேன்....அவ்வ்வ்வ்வ்

அதெல்லாம் விட்டுட்டு மொக்கை கும்மி மட்டும் படித்து என்னை மொக்கை ராணியாக்கிட்டீங்க. இந்த சதி வேலையின் சூத்ரதாரி அந்த மலேஷியா மாரியாத்தாதான்.

சுப்பிரமணி : சரி இப்படி கும்மிப்பதிவுகளுக்கு பதிவுலகக் கலாசாரக் காவலர் பதிவர்கள்கிட்ட இருந்து எதிர்ப்பு எதுவும் கிளம்பிருக்குமே?

கண்மணி : அப்படி எதுவும் கிளம்புறதுக்கு முன்னாடி நானே கும்மி ன்னு ஒரு பதிவை ஆரம்பிச்சி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வச்சாச்சு. முதலில் எல்லோரும் தமிழ்நாட்டின் பாரம்பரியக்கலையான கும்மியைப் பத்தின ஆராய்ச்சிப் பதிவுன்னு நினைச்சி என்னைப் பாராட்டி மின்னஞ்சலெல்லாம் அனுப்பி அவுங்களுக்குப் பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி.

சுப்பிரமணி : அப்புறம் நீங்க வேற என்ன என்ன குழுப்பதிவிலெல்லாம் உறுப்பினரா இருக்கீங்க? அது பத்திச் சொல்லுங்க.

கண்மணி : ப.பா.சங்கம் அப்புறம் அனைத்து மொக்கை, கும்மிப் பதிவுகளிலும் ஆயுள் உறுப்பினர் நான்.

சுப்பிரமணி : பாப்பா சங்கம் என்னாச்சு? ரொம்ப நாளா பூட்டியே கிடக்குன்னு பேசிக்கிறாங்களே?

கண்மணி : அதெல்லாம் வடிகட்டாத பொய். சங்கம் ஏற்கனவே அபராதத்திலதான் ஓடிக்கிட்டிருக்கு. இபி பில், வாட்டர் பில், கட்டட வாடகைன்னு கட்டமுடியாம கரண்ட், தண்ணி, ஏன் கட்டடத்தையும் எடுத்துக்கிட்டாங்க. இதெல்லாம் ஆப் த ரெக்கார்ட். எடிட் பண்ணீருங்க. நிகழ்ச்சியில போட்டுறாதீங்க. அதுனால சேலத்துலயும், ஈரோட்டிலயும் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு நிதி சேர்க்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் எதிர் சங்கம் கிளப்பி விடாத பொய்.

சுப்பிரமணி : அவரவர்க்கு அவரவர் ஆணி. வேறென்ன திட்டமெல்லாம் வச்சிருக்கீங்க. மக்களைக் கவருவதற்கு?

கண்மணி : அடுத்து கின்னஸ் புத்தகத்தில் கும்மியை இடம்பெற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் போறோம். அதுக்காக 24 மணிநேரத்தில் 1லட்சம் பின்னூட்ட்ம் போட்டு சாதனை செய்யத் திட்டம் போட்டிருக்கோம். இதுக்காக இதில் ஏகப்பட்ட அனுபவம் உள்ள 'மீ த பர்ஸ்ட்' புகழ் மைபிரண்டிடம் இந்த வேலையை முடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கோம். அவர் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் ப்ளாக்கர் சர்வரின் கெப்பாசிட்டியையும் சோதனை செய்ய முடியும் இல்லையா?

சுப்பிரமணி : அப்புறம் உங்கள் வழிகாட்டுதலில் நடக்கும் குட்டீஸ் பதிவு பத்தி சொல்லுங்களேன்.

கண்மணி : முதலில் டல்லா இருந்தாலும் குட்டீஸ் பதிவு தான் இப்போ டாப். சக பதிவர்களைக் கலாய்ப்பது முதல் புதுப் ப்து விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவது வரை அவுங்க பதிவுகளாலும் , பின்னூட்டங்களாலும் நிறைய பதிவர்களுக்கு வியாபாரமே குறைஞ்சி போச்சுன்னு பேசிக்கிறாங்க.

சுப்பிரமணி : நீங்க இந்தப் பதிவுலகில் சந்தித்த பிரச்சினைகள் பத்திச் சொல்லுங்களேன்.

கண்மணி : பிரச்சினைன்னா பெரிசா ஒன்னும் இல்லை. இங்கிலீஸ்ல எழுதாதே, குட்டீஸ் பதிவுக்குப் பேர மாத்துன்னு ஒரு பிரச்சினை. அனானியாப் பின்னூட்டம் போட்ட கணினிப் புலவர் ரவிசங்கர் தான் தான் அந்த பின்னூட்டம் போட்டவர்னு ஒத்துக்கிட்ட போது அம்புட்டு நல்லவராயா நீங்கன்னு 'கோலங்கள்' கண்ணீர் வந்துடுச்சி. அப்புறம் பாப்பா சங்கப் பதிவுல ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ்ல புலி பின்னூட்டம் போட அதை வச்சி ஏகத்துக்கும் என்னை கலாய்ச்சிட்டாங்க. இதெல்லாம் டேக் இட் ஈசி யு நோ?

சுப்பிரமணி : வௌவால் பத்தி என்ன நினைக்கிறீங்க? ரொம்ப அப்புராணிப் பறவை இல்லையா?

கண்மணி : பெரிய தொல்லைங்க. குறுக்கும் மறுக்கும் பறந்து இம்சையா இருக்கு. அப்பப்போ கீச் கீச்னு சத்தம் வேற. மொதல்ல எங்க வீட்டு புகைக்கூண்டை கம்பி வச்சி அடைக்கணும். அங்கதான் தங்கியிருக்குதுங்க. ஆமா நீங்க இந்த வௌவால் பத்தித்தானே கேட்டீங்க?

சுப்பிரமணி : ஆமாமா. நானும் பறக்கிற வௌவாலைப் பத்தித்தான் கேட்டேன். ரொம்ப நன்றி கண்மணி. உங்களுக்கு எங்க நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுக்காக ஒரு கும்மி நினைவுப் பரிசு. இதை உங்க பதிவுக்கு சைடிலே போட்டுக்கோங்க.


கண்மணி : போங்கய்யா உங்க பரிசும் நீங்களும்.ஏதோ பரிசுன்னு பார்த்தா லோகோவைக் குடுத்து பிலாக்குல போட்டுக்கச் சொல்லுவீங்க.அதைப் பாத்தாலே புதுசா வர்ரவங்க என்னமோ ஏதோன்னு மெரண்டு ஓடுறாங்க....
ஆளை விடு சாமி.வேணும்னா எங்க ச்சுப்பிரமணிக்கு ஏதாச்சும் பிஸ்கோத்து வாங்கிக் குடு போதும்..