அவள் அலுவலகத்திற்கு மொபைல் போனுடன் வந்தது அவனுக்குப் பெரும் ஆச்சரியமாகப் போனது. தான் என்னவொரு சின்ன விசயமாய் இருந்தாலும் அவளிடம் சொல்லிவிட்டுதான் செய்கிறோம். ஆனால் இவள் நேற்று சாயங்காலம் வரை நம்முடன் தானே இருந்தாள் அப்போது கூட மொபைல் போன் வாங்குவது பற்றி ஏதும் சொல்லவில்லையே என மிகவும் வருத்தமடைந்தான். மொபைல் போன் பற்றி அவளிடம் எதுவும் கேட்கக்கூடாது என எண்ணிக்கொண்டான். அவளும் அதைக் கண்டுகொள்ளவில்லை.
பிறகுதான் பிரச்சனை தொடங்கியது. நித்யாவுக்கு நிறைய அழைப்புகள் அவளது மொபைலில் வரத்தொடங்கின. யார் என்றே தெரியவில்லை. நிறை நேரம் பேசிக்கொண்டே இருந்தாள். அதாவது பரவாயில்லை அவ்வப்போது வெட்கம் வேறுபட்டுக்கொண்டாள். முதன்முதலாக அவள் வெட்கப்பட்டு அப்போதுதான் பார்த்தான். கழுத்துக்கும் காதுக்கும் இடையில் போனை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருந்தாள். அவர்களுக்குள் இடைவெளி விழத் தொடங்கியது. அவள் எதாவது கேட்டால் மட்டுமே பதில் சொன்னான். அவளும் அதிகம் பேசவில்லை. அவளுக்கு போனில் பேசவே நேரம் சரியாக இருந்தது. இப்போதெல்லாம் அவள் பேருந்தில் வருவதில்லை. என்ன செய்கிறாள் என்பது ஒரே மர்மமாக இருந்தது.சில மாதங்கள் இப்படியே கழிந்தன. அன்புவுக்கு இப்போதெல்லாம் ஒழுங்காகத் தூக்கம் வருவதில்லை. படுத்திருக்கும் போது அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்? இன்னும் போனில் பேசிக்கொண்டுதான் இருப்பாளோ? என்றெல்லாம் எண்ணினால் தூக்கம் எப்படி வரும்?
ஒருநாள் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு வந்துவிட்டான். அவள் அவனுக்கு முன்பே வந்தமர்ந்திருந்தாள். இவன் ஏதும் சொல்லாமல் மெளனமாய் தனது கணினியை இயக்கினான். "அன்பு, உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றாள். "என்ன?" என்பதுபோல் பார்த்தான். "நான் இன்னிக்கு வேலையை விட்டுடப்போறேன்". அதிர்ச்சியடைந்தான். ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. "ஏன் என்ன விசயம்?" என்றான். "வேற கம்பெனியில் கிடைச்சிருக்கு. டைடல் பார்க்கில் இருக்கு" என்றாள். "அப்போ இனிமே வரமாட்டியா?". "அடுத்த வாரம் அங்க சேரணும். இங்க இன்னிக்கு பேப்பர் போட்டால் ரிலீவிங்ஆர்டர் நாளைகழித்துதான் கிடைக்கும். சோ நாளைக்கு மட்டும் தான் வருவேன்". அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவள் தொடர்ந்தாள். "அன்பு, உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். மதியம் லஞ்ச் அவர்ல ஸ்பென்சர் போலாமா?". "சரி" என்றான். அவள் அதற்கப்புறம் அவனருகில் இருக்கவேயில்லை. ராஜினாமாக் கடிதம் கொடுத்துவிட்டு மேலதிகாரிகளிடம் பேசுவதிலேயே அவளது நேரம் கழிந்தது. மதியமும் வந்தது.
இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் ஸ்பென்சர்பிளாசாவை நோக்கி நடக்கத்தொடங்கினார்கள். "ஏன் எங்கிட்ட சரியா மாட்டேங்கிற?" என்றாள். இவன் பதில் சொல்லாமல் நடந்து வந்தான். "நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணினேன் தெரியுமா?" . இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் அவனைக் கூர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. "உண்மையைச் சொல். நீயும் தானே?" எனக் கேட்டாள். அவனுக்குக் கண்களில் கண்ணீர் நிறைந்தது. இவன் மெளனமாகத் தலையாட்டினான். "அப்போ இவ்வளவு நாள் ஏன் சும்மா இருந்த?" என கேள்விகேட்டாள். "ஏனோ சொல்லனும்னு தோணலை" என்றான். "ஆனால் நான் சொல்லனும்னு தான் நினைத்தேன். அதற்குள்.." அவள் விம்மத் தொடங்கினாள். அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அவளே தொடர்ந்தாள். "அதற்குள் கார்த்திக் சென்னைக்கு வந்துவிட்டான். கார்த்திக் என்னுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவன். கல்லூரியில் படிக்கும்போது இருவரும் காதலிக்கத் தொடங்கினோம். வேலை தேடிவரும் போது அவன் பெங்களூருக்கும், நான் சென்னைக்கும் வந்துவிட்டோம். கார்த்திக்கைப் பிரிந்து தனியாக இருக்கும்போது தான் உனது அறிமுகம். நான் என்ன சொன்னாலும் நீ சரி எனக் கேட்பதுவும், உன்னுடைய கேரக்டர், டீசன்சி எல்லாம் எனக்குப் பிடித்துப் போனது. ஒரு கட்டத்தில் என்னை அறியாமல் உன்னைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். உன்னிடம் காதலிப்பதைக் கூறலாமா வேண்டாமா அது கார்த்திக்கிற்குச் செய்யும் துரோகமா என்றெல்லாம் என் மனம் குழம்பியபோதுதான் கார்த்திக் அவனுக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும் இரண்டு நாட்களில் இங்கு வருவதாகவும் சொன்னான். அவன் வாங்கிக் கொடுத்ததுதான் இந்த மொபைல் போன். இப்போ அவன் ரெபரென்சில் தான் அவன் கம்பெனியில் வேலையில் சேரப்போறேன். அதற்குப் பிறகு நீ என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரியும் நான் மொபைல் போன் வாங்கிவிட்டு உன்னிடம் சொல்லாததும், எப்போ பார்த்தாலும் கார்த்திக்கிடம் மொபைல் போனில் பேசிக்கொண்டேயிருப்பதும்தான் நீ என்னிடம் பேசாமலிருப்பதற்குக் காரணம். உன்னை நான் அடிக்கடி நீ என் பிரண்ட் இல்லை என்று சொன்னதன் காரணம் நான் உன்னை ஜஸ்ட் பிரண்டாக மட்டும் நினைக்கவில்லை. ரொம்ப அன்னியோன்மமானவர்களுக்குள் செய்து கொள்ளும் உதவிக்கு தேங்ஸ் எதற்கு? அதான் நான் அடிக்கடி அவ்வாறு சொல்வேன்". அவனால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை.
மறுநாள் நித்யா ஒரு வாலிபனுடன் அலுவலகத்திற்கு வந்திருந்தாள். அவள் ராஜினாமா செய்துவிட்டதால் உள்ளே வர அனுமதியில்லை. வெளியில் இருந்து கைஅசைத்துக் கூப்பிட்டாள். இவன் வெளியே சென்றதும் "கார்த்திக், இது என் பிரண்ட் அன்பு.". "ஹாய்". "ஹலோ". அறிமுகம் முடிந்தது. "அன்பு, ரிலீவிங் லெட்டர் வாங்கியாச்சு. கிளம்பியாச்சு. என் மொபைல் நம்பர் குறிச்சுக்கோ.". "பிரண்ட்னு சொல்ற. உன் மொபைல் நம்பர் அவர்ட்ட இல்லயா?" இது கார்த்திக். அன்பு பதில் சொல்லமுடியாமல் முழித்தான். "இல்ல. இவன் இப்போ தான் மொபைல் வாங்கியிருக்கான்" அவள் சமாளித்தாள். "சரி. கண்டிப்பா கால் பண்ணு. வரேன்". இதற்குள் லிப்ட் வந்துவிட்டது. உள்ளே போகுமுன் ஒருமுறை திரும்பிப் பார்த்தாள். கலங்கிய கண்களுடன் அவள் முகம் தெரிய லிப்ட் மூடியது.
பிறகு அன்பு மொபைல் நம்பர் மாற்றிவிட்டான். ஏனோ பிறகு அவளைத் தொடர்பு கொண்டு பேச வேண்டுமென்று தோன்றவில்லை. என்னத்தப் பேச? பிறகு எப்படியோ மின்னஞ்சல் முகவரியை ஞாபகம் வைத்து இப்போது பத்திரிக்கை அனுப்பி இருக்கிறாள். மீண்டும் ஒருமுறை பத்திரிக்கையைப் படித்துப் பார்த்தான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் கோயமுத்தூருக்கு முன்பதிவு செய்யத் தயாரானான்.
(முடிந்தது)
எங்கே நீ போனாலும் - 1
நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்
Showing posts with label சிறுகதை முயற்சி. Show all posts
Showing posts with label சிறுகதை முயற்சி. Show all posts
Thursday, March 08, 2007
Tuesday, March 06, 2007
எங்கே நீ போனாலும் - 1
காலையில் மின்னஞ்சலைப் பார்த்ததும் அன்புவிற்கு ஏதோபோல் ஆகிவிட்டது. மீண்டும் பார்த்தான். நித்யா வெட்ஸ் கார்த்திக். அலுவலகத்திற்கு சீக்கிரமே வந்துவிட்டதால் வேறு யாரும் இல்லை. எல்லோரும் வருவதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும். கண்களில் அவனை அறியாமல் நீர் துளிர்த்தது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தவையெல்லாம் அவன் மனதில் தோன்றியது.
"எக்ஸ்கியூஸ் மி. உங்க மொபைல் நம்பர் தாரீங்களா?" இது தான் நித்யா அவனிடம் பேசிய முதல் வாக்கியம். "சாரி. என்கிட்ட செல் இல்லங்க. என் பிரண்ட் நம்பர் தான் இருக்கு. வேணும்னா குறிச்சுக்கோங்க" இது அவன். "இட்ஸ் ஓகே. என்கிட்டயும் மொபைல் போன் கிடையாது. வெளியிலிருந்துதான் பேசணும். சும்மா இண்டர்வியு ஸ்டேடஸ் கேட்கலாமேன்னுதான்". கொடுத்தான். குறித்துக் கொண்டாள். அவளை முதன்முதலில் சந்தித்தது ஒரு அலுவலகத்திற்கு நேர்காணலுக்காகச் சென்ற போதுதான். வந்திருந்தது இருவர் மட்டுமே. முதலில் அவளுக்கு நேர்காணல் முடிந்து அன்பு அவனது அழைப்புக்காக காத்திருந்த போது நடந்த உரையாடல் தான் மேலே கண்டது.
நம்பர் வாங்கிச் சென்றவள் ஏனோ தொடர்பு கொள்ளவே இல்லை. மறந்திருப்பாள் என எண்ணினான். இரண்டு நாட்களில் அந்த அலுவலகத்தில் வேலையில் அடுத்த ஒரு வாரத்தில் சேரச் சொல்லிக் கடிதம் வந்துவிட்டது. இவனும் அங்கே சென்ற போது அவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தாள் நித்யா. பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். "போன் பண்ணவேயில்லை?" என்றான். "ஆக்சுவலா நான் ஊருக்குப் போய் விட்டேன். நேற்று தான் வந்தேன். அதனால தான். என் சொந்த ஊர் கோயமுத்தூர். உங்களுக்கு?" என்றாள். "மதுரை" என்று பதிலளித்தான். இறைவனின் விருப்பத்தால் இருவரும் ஒரே குழுவில் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்தத்த இருக்கைகள்.
நிறையப் பேசினார்கள். நண்பர்கள், திரைப்படம், சி, யுனிக்ஸ் இப்படி. அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவளுக்கு?. தெரியவில்லை. அவளது பேச்சை வைத்து எதுவும் கணிக்க முடியாதவனாகவே இருந்தான். அவளிடம் அவனுக்கு பிடிக்காதது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அடிக்கடி "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை" என்பாள். முதல் முறையாக அவள் அப்படிச் சொன்ன போது அவன் மிகவும் சங்கடப்பட்டான். ஒருமுறை "என்ன பிரண்டுக்காக இது கூட செய்யமாட்டியா?" யோசிக்காமல், சிரிக்காமல் பதில் சொன்னாள் "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை". மற்றது "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்பாள். "உனக்காக கஷ்டப்பட்டு நெட்டில் தேடி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டுவந்திருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா?". "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்று டக்கென்று கூறினாள். மற்ற சமயங்களில் நன்றாகத்தான் பேசினாள். அதற்காக சும்மா இருந்தான்.
அவன் அறையில் செய்யும் சாப்பாட்டையும், அவள் விடுதியில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டையும் மதியம் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். சில சமயங்களில் உணவை மாற்றியும் சாப்பிட்டார்கள். இவன் ஊருக்குச் சென்று திரும்பும்போது வீட்டிலிருந்து பலகாரங்களை இவளுக்காகத் தனியாக எடுத்துவந்தான். அவளும் அப்படியே. தீபாவளிக்குத் தன் அம்மாவிற்குப் புடவை எடுக்கவேண்டும் என்று கூறி அவளை ஆர்.எம்.கே.விக்கு அழைத்துச் சென்றான். அவளும் ஒரு நல்ல புடவையாக தேர்வு செய்தாள். பிறகு திநகர் பேருந்து நிலையம் அருகே சரஸ்பதி வாட்ச் சென்டரில் தன் தங்கைக்கு ஒரு கடிகாரம் தேர்வு செய்யச் சொன்னான். வீட்டில் கொடுக்கும்போது "இது என் கூட வேலை பார்க்கிற பொண்ணு செலக்ட் பண்ணினது. பேரு நித்யா. ஊரு கோயமுத்தூரு" என்று காதில் போட்டுவைத்தான். அவன் அம்மாவிற்கு சேலை மிகவும் பிடித்துவிட்டது. தங்கைக்கு வாட்சை மிகவும் பிடித்துவிட்டது மேலும் அண்ணனையும், அண்ணணுடன் வேலை பார்ப்பவர்களையும்.
ஒரு மழைநாளில் இவன் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது குடையில்லாததால் ஒதுங்கி நிற்க எண்ணினான். அவள் உடனே "ஏன் நிற்கிறே? வா என் குடையிலேயே போய்விடலாம்" என்று அழைத்தாள். சிறிய குடை. பெரிய மழை. இருவரும் நனையாமல் இருக்கவேண்டும். அவள் யோசிக்காமல் அவனை உரசியவாறே வந்தாள். அரைமணி நேரம் பேருந்து நிறுத்ததில் நின்றார்கள். ஏற இயலவில்லை. உடனே "ஆட்டோவில் போவோம்" என்று பதிலுக்குக் காத்திராமல் ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஒரே ஆட்டோவில் சென்றார்கள். அவளை கோடம்பாக்கத்தில் அவளது விடுதியில் இறக்கிவிட்டு விட்டு தனது அறை இருக்கும் சாலிகிராமம் சென்றான். அன்று இரவு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. சென்னை முழுவதும் குடைகளால் மூடப்பட்டது போல் கனவு கண்டான். இப்படி எல்லாம் அருமையாகப் போய்க்கொண்டிருந்தது அவள் மொபைல் போன் வாங்கும் வரை.
(அடுத்த பதிவில் முடியும்)
எனது முதல் கதை முயற்சி. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். :)
நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்
"எக்ஸ்கியூஸ் மி. உங்க மொபைல் நம்பர் தாரீங்களா?" இது தான் நித்யா அவனிடம் பேசிய முதல் வாக்கியம். "சாரி. என்கிட்ட செல் இல்லங்க. என் பிரண்ட் நம்பர் தான் இருக்கு. வேணும்னா குறிச்சுக்கோங்க" இது அவன். "இட்ஸ் ஓகே. என்கிட்டயும் மொபைல் போன் கிடையாது. வெளியிலிருந்துதான் பேசணும். சும்மா இண்டர்வியு ஸ்டேடஸ் கேட்கலாமேன்னுதான்". கொடுத்தான். குறித்துக் கொண்டாள். அவளை முதன்முதலில் சந்தித்தது ஒரு அலுவலகத்திற்கு நேர்காணலுக்காகச் சென்ற போதுதான். வந்திருந்தது இருவர் மட்டுமே. முதலில் அவளுக்கு நேர்காணல் முடிந்து அன்பு அவனது அழைப்புக்காக காத்திருந்த போது நடந்த உரையாடல் தான் மேலே கண்டது.
நம்பர் வாங்கிச் சென்றவள் ஏனோ தொடர்பு கொள்ளவே இல்லை. மறந்திருப்பாள் என எண்ணினான். இரண்டு நாட்களில் அந்த அலுவலகத்தில் வேலையில் அடுத்த ஒரு வாரத்தில் சேரச் சொல்லிக் கடிதம் வந்துவிட்டது. இவனும் அங்கே சென்ற போது அவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தாள் நித்யா. பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். "போன் பண்ணவேயில்லை?" என்றான். "ஆக்சுவலா நான் ஊருக்குப் போய் விட்டேன். நேற்று தான் வந்தேன். அதனால தான். என் சொந்த ஊர் கோயமுத்தூர். உங்களுக்கு?" என்றாள். "மதுரை" என்று பதிலளித்தான். இறைவனின் விருப்பத்தால் இருவரும் ஒரே குழுவில் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்தத்த இருக்கைகள்.
நிறையப் பேசினார்கள். நண்பர்கள், திரைப்படம், சி, யுனிக்ஸ் இப்படி. அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவளுக்கு?. தெரியவில்லை. அவளது பேச்சை வைத்து எதுவும் கணிக்க முடியாதவனாகவே இருந்தான். அவளிடம் அவனுக்கு பிடிக்காதது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அடிக்கடி "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை" என்பாள். முதல் முறையாக அவள் அப்படிச் சொன்ன போது அவன் மிகவும் சங்கடப்பட்டான். ஒருமுறை "என்ன பிரண்டுக்காக இது கூட செய்யமாட்டியா?" யோசிக்காமல், சிரிக்காமல் பதில் சொன்னாள் "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை". மற்றது "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்பாள். "உனக்காக கஷ்டப்பட்டு நெட்டில் தேடி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டுவந்திருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா?". "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்று டக்கென்று கூறினாள். மற்ற சமயங்களில் நன்றாகத்தான் பேசினாள். அதற்காக சும்மா இருந்தான்.
அவன் அறையில் செய்யும் சாப்பாட்டையும், அவள் விடுதியில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டையும் மதியம் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். சில சமயங்களில் உணவை மாற்றியும் சாப்பிட்டார்கள். இவன் ஊருக்குச் சென்று திரும்பும்போது வீட்டிலிருந்து பலகாரங்களை இவளுக்காகத் தனியாக எடுத்துவந்தான். அவளும் அப்படியே. தீபாவளிக்குத் தன் அம்மாவிற்குப் புடவை எடுக்கவேண்டும் என்று கூறி அவளை ஆர்.எம்.கே.விக்கு அழைத்துச் சென்றான். அவளும் ஒரு நல்ல புடவையாக தேர்வு செய்தாள். பிறகு திநகர் பேருந்து நிலையம் அருகே சரஸ்பதி வாட்ச் சென்டரில் தன் தங்கைக்கு ஒரு கடிகாரம் தேர்வு செய்யச் சொன்னான். வீட்டில் கொடுக்கும்போது "இது என் கூட வேலை பார்க்கிற பொண்ணு செலக்ட் பண்ணினது. பேரு நித்யா. ஊரு கோயமுத்தூரு" என்று காதில் போட்டுவைத்தான். அவன் அம்மாவிற்கு சேலை மிகவும் பிடித்துவிட்டது. தங்கைக்கு வாட்சை மிகவும் பிடித்துவிட்டது மேலும் அண்ணனையும், அண்ணணுடன் வேலை பார்ப்பவர்களையும்.
ஒரு மழைநாளில் இவன் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது குடையில்லாததால் ஒதுங்கி நிற்க எண்ணினான். அவள் உடனே "ஏன் நிற்கிறே? வா என் குடையிலேயே போய்விடலாம்" என்று அழைத்தாள். சிறிய குடை. பெரிய மழை. இருவரும் நனையாமல் இருக்கவேண்டும். அவள் யோசிக்காமல் அவனை உரசியவாறே வந்தாள். அரைமணி நேரம் பேருந்து நிறுத்ததில் நின்றார்கள். ஏற இயலவில்லை. உடனே "ஆட்டோவில் போவோம்" என்று பதிலுக்குக் காத்திராமல் ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஒரே ஆட்டோவில் சென்றார்கள். அவளை கோடம்பாக்கத்தில் அவளது விடுதியில் இறக்கிவிட்டு விட்டு தனது அறை இருக்கும் சாலிகிராமம் சென்றான். அன்று இரவு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. சென்னை முழுவதும் குடைகளால் மூடப்பட்டது போல் கனவு கண்டான். இப்படி எல்லாம் அருமையாகப் போய்க்கொண்டிருந்தது அவள் மொபைல் போன் வாங்கும் வரை.
(அடுத்த பதிவில் முடியும்)
எனது முதல் கதை முயற்சி. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். :)
நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்
Subscribe to:
Posts (Atom)