Tuesday, April 29, 2008

ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா & ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்



நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு 'சென்டிமென்ட் சர்மா' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

கொசுறு : நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)

-----XX-----

ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்


மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?


...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........

இது தான் காரணம் :)



மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்

எல்லா வினைக்கும் ...........


சரிசமமான எதிர்வினை உண்டு ......



மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சைமண்ட்ஸைக் கேட்டார்


ஹைடனைக் கேட்டார்


ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்



கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்






நன்றி :
சாம்
-----XX-----
அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!




Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

Thursday, April 24, 2008

இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?



யாரா இருந்தாலும் சரி.. வெறிநாய்னா குலைக்கத்தான் செய்யும் !!

அடங்குடாடேய்! யோகா கத்துக்குற மூஞ்சியைப் பாரு !

நன்றி : சாம்

Saturday, April 12, 2008

சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?


Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு ஆண்டு சந்தாவும் அறிமுகச்சலுகையாக வழங்கி பெரும்பாலானோரை தன் பக்கம் இழுத்தது. படிக்கிறோமோ இல்லையோ சந்தா கட்டினால் ஒரு வருசம் கழித்து கணிசமான எடைக்கு காகிதம் சேரும் என்ற எண்ணத்துடன் சந்தா கட்டியவர்கள் பலர் என்றால் மிகையில்லை. Deccan Chronicle கொடுத்த அதிர்ச்சியில் தான் ஹிந்து நாளிதழ் தனது எழுத்துக்கள் மற்றும் வடிவத்தை உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கை வடிவமைப்பாளர் கொண்டு மாற்றியமைத்தது.

பெங்களூரில் Times of India வை செய்திகளின் தரத்துக்காக வாங்குபவர்களை விட அதனுடன் வரும் Bangalore Times (சுருக்கமாக BT) என்ற இணைப்புக்காகவே நிறைய இளைஞர்கள் வாங்குவார்கள்(வோம்). முழுக்க முழுக்க திரைப்படத்துறை குறித்த செய்திகள் அதுவும் முழுக்க முழுக்க விருந்து, கேளிக்கை இந்தி திரைப்படச் செய்திகளே இடம்பெறும். கடைசிப்பக்கத்தில் கன்னடம் எப்பவாவது தமிழ்,தெலுங்கு,மலையாளத் திரைப்படச் செய்திகளும் இருக்கும். எனவே ஆங்கிலத்தில் படங்களுடன் தமிழ்த்திரைப்படச் செய்திகள் நிறைந்த Chennai Times இணைப்பு இருக்கும் என்பது உறுதி.

அதே நேரம் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் Times of India குழுமத்தின் செய்தித் தொலைக்காட்சியான Times Now ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வர் பேசிய பேச்சின் ஒரு பகுதியினை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வெறுப்பேற்றியது. 'எங்கள் எலும்புகளை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்பதை மட்டும் கன்னடர்களுக்கு வெறியேற்றும் விதமாக போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தது. முக்கியமாக கலைஞர் சொன்ன 'இந்திய இறையாண்மை கர்நாடகத்தால் கேள்விக்குறியாகிறது' என்பதை மறைத்துவிட்டார்கள். ஏன்? குற்ற உணர்ச்சியா? காரணமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.

தற்போதைய சூழலில் உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஹிந்து நாளிதழ் நடுநிலை மறந்து தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் Times of India நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டால் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.