Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Saturday, May 01, 2010

பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்


ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)

நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.

மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....

சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக.

அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?

தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.

ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.

ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)

இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.

ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....

Monday, June 23, 2008

(கு)ரங்கும் ஜிலேபியும்


நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.

பெண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.

குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.

"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"
"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"
"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"
"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"

பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.
"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.

"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"

"பரவாயில்லை. பண்ணிரலாம்"

"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"

"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"

"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"

"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"

"புரியறமாதிரி சொல்லேண்டி"

"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"

ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.

Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

Wednesday, January 02, 2008

ஆர்குட்டில் டிஆர் படும் பாடு! கரடி காங் டிஆர் ரசிகர் மன்றமாம் !

நம்ம டிஆர் ஐ வச்சி எத்தனை காமெடிதான் பண்ணுவாங்களோ... இப்போ ஆர்குட்டிலும். சும்மா ஆர்குட்டில் உலாத்துனப்ப கண்ணுல பட்டதுதான் 'கரடி காங் டிஆர்' ரசிகர் மன்றம். பாவம் மனுசனைப் பாடாய்படுத்துறாங்க. ப்ரொபைல் படமே பயங்கரம். சிம்பன்சியும், டிஆரும் சிரிக்கிறாப்புல இருக்கு. இதில 4957 உறுப்பினர்கள் வேற. அவர் என்ன பண்ணுனாலும் கலாய்க்கிறதுதான் இங்க வேலை.



இக்குழுமத்திலிருந்து ஒரு கருத்துக்கணிப்பு கீழே.

veerasami ya hollywood la dub panna enna peru vaipanga

the brave lord
return of the hipopotamus
wider_man
courage underwear fire
monky in the lungi's shadow
the zoolander
the last saavugaraki
manusan impossible
niiingala peru vachikingoooooooo


ஏற்கனவே டிஆர் ஐப் பத்தி ஒரு படம் நான் என் பதிவிலே போட்டதுக்கே சண்டைக்கு வந்த சிலர் இதுக்கு என்ன செய்யப்போறாங்கன்னு தெரியல.

முக்கிய குறிப்பு : நான் இக்குழுமத்தில் உறுப்பினர் இல்லை. இது தெரியாம என்னையப் போட்டுக் கும்மிறாதீங்க. ஆனால் அங்கே சில பதிவர்களின் ப்ரொபைல்கள் கண்ணில்படுகின்றன. கும்முறதுன்னா இங்க போய் கண்டுபிடிச்சிக் கும்முங்க. ஏதோ நம்மால முடிஞ்சது.

வியப்பூட்டும் சில சம்பவங்கள் - உண்மையா, பொய்யா, தற்செயலா?

எனக்கும் சமயங்களில் வியப்பூட்டும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நானும் பாரதியாரும் ஒன்று. கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது. கணக்கு எப்பவுமே பிணக்குதான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வந்தவுடன் எனக்கெல்லாம் செம பயம். எல்லாம் கணக்கை நினைத்துதான். வீட்டிற்கு வந்தவுடன் நாள்காட்டியில் தேர்வுநாட்களுக்கான பலன்களை எடுத்துப் பார்த்தேன். கணக்குத்தேர்வன்று போட்டிருந்த பலன் என்ன தெரியுமா? 'வெற்றி'. ஆகா தப்பிச்சோமடா சாமின்னு கொஞ்சம் தைரியமாகவே இருந்தேன். அதைப் போலவே கணக்குத்தேர்வும் சுலபமாகவே இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சாதாரணமாக கணக்கில் 55,60 என வாங்கு நான் முழுஆண்டுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் 95 :O. இதைக்கூட தற்செயல் என்று சொல்லிவிடலாம். அடுத்த சம்பவம் அப்படி அல்ல.

ஜாதகம் பார்ப்பதிலும் எனக்கு நம்பிக்கை அந்த அளவு இல்லை. இருப்பினும் வீட்டில் பெரியவர்கள் எதிர்த்துப் பேசும் தைரியம் இல்லாததாலும், அவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதாலேயும் பேசாமல் இருந்துவிடுவேன். இங்கே இருக்கும் பெரும்பாலோனோரும் அப்படித்தான் என நினைக்கிறேன். நான் எங்கள் சொந்த ஊரில் இருந்தபோது என்வீட்டின் அருகில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடிச் செல்வது வழக்கம். ஒருநாள் பொழுது போகாததால் கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அக்கோவிலின் குருக்களிடம் ஒருவர் தன் மகளுக்கு ஜாதகம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் தெரிந்தவர்தான். அவர் மகள் ஒரு சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். குருக்களும் அவரிடம் நட்சத்திரம், பிறந்ததேதி, நேரம் ஆகியவற்றைக் கேட்டுவிட்டு ஒரு புத்தகத்தில் எதையோ பார்த்துப் பார்த்து குறித்துக் கொண்டிருந்தார். பின்னர் குருக்கள் அவரிடம் "ஜாதகம் இப்பொழுது எழுத வேண்டாம். உன் மகளுக்கு 12 வயது முடிந்தவுடன் எழுதிக்கொள்ளலாம். அது தான் சரியான சமயம்" என்று சொல்லிவிட்டார். அச்சிறுமியின் தந்தையும் பேசாமல் போய்விட்டார். அவர் உடனிருந்த மற்றொரு குருக்கள் அவரிடம் "ஏன் ஓய் எழுதலை?" ன்னு கேட்க அவர் "அந்தப் பொண்ணுக்கு பன்னிரெண்டோட ஆயுள் முடியுது" ன்னு யாருக்கும் கேட்காமல் சொன்னது எனக்குக் கேட்டுவிட்டது. மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. அந்தப் பெண்ணும் முடியாமல் இருந்து 12வயதிலேயே இறந்துபோனாள். இது ஒரு மிகவும் சோகமான உதாரணம்.

அப்புறம் கும்பகோணத்தில் ஓலைச்சுவடியை வைத்துப் பலன்கள் சொல்கிறார்கள் என்று என் மாமா அங்கு சென்று வந்தார். அவர்கள் பலன்களை ஒரு ஒலிநாடாவில் பேசிப் பதிந்து கொடுத்திருந்தார்கள். என் மாமா அவர்களிடம் சொன்னது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அவர் பெயர். மற்றது அவரது கைரேகை. பிறந்த தேதி கேட்டபோது அவர்களை சோதனை செய்யும் விதமாக விவரமாக "தேதி தெரியாது" என்று சொல்லிவிட்டார். வீட்டில் வந்து ஒலிநாடாவைக் கேட்டால் அவர்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருந்தது 90% உண்மை. குடும்பத்தில் எத்தனை பேர், அவர்கள் பெயர், என்ன தொழில் என எல்லாமும் சொல்லியிருந்தனர். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. எதாவது மை போட்டு(!) விசயத்தைக் கறந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதன் ரகசியத்தைச் சொல்லவும்.

இன்னும் சில இருக்கின்றன ஞாபகம் வரும்போது சொல்கிறேன்.

Monday, December 31, 2007

தொல்லை கொடுக்கும் கனவுகளும், பல்லி விழுந்த பலன்களும்

எனக்கும் பல சமயங்களில் (இன்னமும்) இரண்டு கனவுகள் தோன்றி என்னைத் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்துவிடுகின்றன. அதில் முதலாவது நான் நண்பர்களுடன் சேர்ந்து வெண்குழல்வத்தியை ஆழமாக இழுத்து வட்ட வட்டமாகப் புகைவிடுவது போலத் தோன்றுவது. கனவிலேயே, வீட்டிற்குப் போனால் மாட்டிக் கொள்வோமே என்றும் சரி ஹால்ஸ் ஒன்று வாங்கிப்போட்டுக் கொள்ளலாம் என்று யோசனையும் தோன்றும். அவ்வளவுதான் பட்டென முழித்துப் பார்த்தால் நடுநிசியைத் தாண்டியிருக்கும். இதில் முக்கியமான விசயம் என்னன்னா எனக்கு தம்மடிக்கும் பழக்கம் கிடையாது. பொதுவாக சிலர் தாங்கள் விரும்பும் ஒரு விசயம் கனவில் தோன்றும் என்று சொல்லுவார்கள். எனக்கு அப்படியெதுவும் தம்மடிப்பதில் விருப்பமில்லை. இருந்தாலும் ஏன் இந்தக் கனவு வருகிறதுன்னு தெரியவில்லை.

அடுத்தது நான் இன்னமும் பள்ளியில் படிப்பது போலவும் இன்னும் சிறிது நாளில் பரீட்சை நடக்கப்போவது போலவும் "ஐயையோ சமூக அறிவியல் பாடம் இன்னமும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையே!" என்று மிகவும் கவலைப்படுவது போலவும் தோன்றும். பள்ளியைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இந்தக் கனவும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமூக அறிவியல் எல்லாம் பத்தாம் வகுப்பில்தான். அதிகாலையில் நிகழும் கனவுகள் பலிக்கும் என்று வேறு சொல்வார்கள். இந்தக் கனவுகள் திரும்பத் திரும்ப வருகின்றனவே தவிர வேற ஒன்னும் செய்யலை. பொதுவாக கனவை வெளியில் சொல்லிவிட்டால் பலிக்காது என்று சொல்வார்கள். நான் வெளியில் சொல்லிவிட்டேன். இனியாவது அவை தொல்லை கொடுக்காமல் இருக்குமா எனப் பார்ப்போம்.

அடுத்த தொல்லை இந்தக் கிரகப்பெயர்ச்சிப் பலன்கள். முதலில் குருப்பெயர்ச்சி வந்தது. அடுத்து சனிபெயர்ச்சி. இப்போ புது வரவு ராகு-கேது பெயர்ச்சி. இது போதாதென்று தின, வார, மாத மற்றும் பிறந்தநாள் பலன்கள் வேறு. இதில் எதை நம்புவது எதை விடுவது என்று மகா குழப்பமாக உள்ளது. முதலில் தினத்தந்தியில் வார பலன்கள் மட்டும் படித்து வந்தேன். அதில் அவன் நாலு சொல்லியிருந்தால் அதில் ஒன்று பலித்தது. அப்படி எதுவும் பலிக்கவில்லையென்றாலும் நடந்த சம்பவங்களை ராசிபலன்களுடன் பொருத்திப்பார்க்கும் மனநிலை தோன்றியவுடன் அவற்றைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். என்னைப் பொறுத்தவரை எந்தப் பலன்களையும் நம்பாமல் சாமியை மட்டும் கும்பிட்டு விட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

இணைய விகடனில் போட்டிருந்த குருப்பெயர்ச்சிப் பலன்களில் சிம்மராசிக்கு எல்லாம் சூப்பர், டக்கர் என்று போட்டிருந்தார்கள். அதற்கு ஒருவர் பின்னூட்டம் போட்டுக் கிழித்திருந்தார். "ஏன்யா இரண்டு மாசம் முன்னாலதான் சனிப்பெயர்ச்சிக்கு மகா கேவலமா பலன்கள் போட்டிருந்த. அடுத்த சனிப்பெயர்ச்சி அடுத்த வருசம் தான். இப்ப என்னன்னா குரு பெயர்ச்சி பலன்ல ஆகா ஓகோ போட்டிருக்கீங்க. இதில் எது உண்மை? எதை நாங்கள் நம்புவது?"ன்னு. அவர் கேட்பதும் சரிதானே? இதற்கு விகடனின் பதில் மவுனம்.

அடுத்து நாள்காட்டியில்‌ ப‌ல்லி விழும் ப‌ல‌ன்னு ஒன்னு போட்டிருக்காங்க. ப‌ல்லி சுவ‌ரில் இருந்து த‌வ‌றி ந‌ம்ம‌ மேல‌ விழுந்துட்டா அதுக்கு என்ன‌ ப‌ல‌ன்னு சொல்லியிருப்பாங்க‌. நான் எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது வீட்டில் அம‌ர்ந்து பாடம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ப‌ல்லி என‌து இட‌து கையில் விழுந்துவிட்ட‌து. அடடா என‌ நினைத்து கையைக் க‌ழுவிவிட்டு நாள்காட்டியைத் திருப்பிப்பார்த்தால் அதில் போட்டிருந்த‌ ப‌ல‌ன் என்ன‌ தெரியுமா ?

இடது கை - ம‌ர‌ண‌ம்.

ஐயையோன்னு ப‌த‌றி அடிச்சி ப‌ல்லி இட‌து கையில்தான் விழுந்த‌தான்னு ந‌ல்லா உறுதி செய்த‌பிற‌கு, ச‌ரி வ‌ல‌து கைக்கு என்ன‌ன்னு பார்த்தா ம‌றுபடியும் அதிர்ச்சி தான்.

வ‌ல‌து கை - ம‌ர‌ண‌ம்.

ஒரு வேளை ப‌ல்லிக்குத்தான் அந்த‌ப் ப‌ல‌னோ என்ன‌மோ? :))) ன்னு மனசைத் தேற்றிக்கொண்டேன். அப்ப‌டின்னாலும் ப‌ல்லி நாள்காட்டியெல்லாம் ப‌டிக்குமா என்ன‌?

நான் நம்பாத மற்றொரு விசயம் வாஸ்து. ஏன் இந்த‌ வாஸ்தெல்லாம் இப்போ வ‌ந்த‌துதானே. அந்த‌க் கால‌த்திலெல்லாம் ம‌னையடி சாஸ்திர‌ம் என்ற‌ திசை அடிப்ப‌டையிலான‌ முறை வைத்துத்தான் பெரிய பெரிய வீடுகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அதே வீடுகளை அதைக் கட்டியவர்களின் மகன்களும், பேரன்களும் இடித்து அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்துப்படி தென்மேற்குத்திசையில் வீடு உயரமாயிருக்க வேண்டும் என்பதற்காக மொட்டைமாடியில் செங்கற்களை கோபுரம் போல அடுக்கிவைத்திருக்கின்றனர் சிலர். அவை கீழே விழுந்து எவர் மண்டையையாவது உடைத்தால்தான் தெரியும் வாஸ்துவும் அதனால் கிடைக்கும் பலன்களும். வாழ்க்கையில் சில தோல்விகள் வரும்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைவர்களை இந்த வாஸ்துவாதிகள் கெட்டியாகப் பிடித்து விடுகிறார்கள்.

இவை எல்லாமே சிந்திக்கவைக்கும் விசயங்கள் தான். இன்றளவும் என்னாலும் நம்பமுடியாத சில வியப்பூட்டும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதை அப்புறமா சொல்லுறேன்.

Saturday, December 29, 2007

தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா தூக்குல தொங்கு !

ஆர்குட் ஒரு சமுதாய வலைத்தளம்கிறது ரொம்பவே சரிதான். நாலும் இருந்தாத்தான் சமுதாயம். அதுனாலதான் தமிழ்நாட்டுத் தண்ணி வண்டிங்க எல்லாம் ஒரு குழுமத்தில இருக்காங்க.

அட ஆமாம். டாஸ்மாக்குக்கும் ஒரு குழுமம் இருக்குங்க. அதில் 1001 பேர் உறுப்பினர்கள். செம ரகளையாக இருக்கு குழுமம். "தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா, தூக்குல தொங்கு"ன்னு சொல்றாங்க அதுல.

அதன் தொடர்புடைய குழுமங்கள் எல்லாம் ரம், ஒயின், பீர் குழுமங்கள் தான். இது பத்தாதுன்னு "தண்ணியைப் போட்டுட்டு வீட்டுக்குப் போவீங்களா இல்ல அங்கயே குப்புற விழுந்துருவீங்களா?" "சரக்குக்கு சூப்பர் சைட்டிஷ் எது?" "சிறந்த சரக்கு எது?" "சரக்கடிக்க சிறந்த இடம் எது?"ன்னு கருத்துக்கணிப்பு வேற. பார்க்க படங்கள்.





இக்குழுமத்தின் முகவரி http://www.orkut.com/Community.aspx?cmm=7519409

ம். யாரையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா சமுதாயம்னா நாலும்தான் இருக்கும்.

Thursday, December 27, 2007

'ஐ' க்குப் பதில் 'அய்' ஏன்?

'ஐ' அல்லது 'ஐ' சேர்ந்த உயிர் மெய் எழுத்துக்களை எழுதும் போது சிலர் 'ஐ'க்குப் பதில் 'அய்' என்று எழுதுகின்றனர்.

உதாரணம்
மையம் - மய்யம்

இது ஏன்? இப்படி எழுதுவது சரி என்று பள்ளியில் தமிழ் இலக்கணப் புத்தகங்களில் படித்ததாகவும் நினைவில்லை. பொதுவாக தூய தமிழில் எழுதுபவர்கள் வடமொழிஎழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதுவர் (உ-ம். ராமதாஸ் - ராமதாசு). அதைப் போல 'ஐ' என்பது தமிழ் எழுத்து என்பது மறந்து போய் வடமொழி எழுத்து என்று நினைத்து ;) இப்படி எழுதுகிறார்களா அல்லது தங்களைப் பிறரிடமிருந்து தனியே இலக்கியவாதிகளாகக் காட்டிக் கொள்ள இப்படி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே எதாவது இலக்கண விதிகள் இருக்கின்றனவா?

சரி இப்படியே போனால் என்னாவாகும் என்பது கீழே.

ஐஸ்வர்யா - அய்ஸ்வர்யா
ஐடியா - அய்டியா
ஐயம் - அய்யம்
பண்ணை- பண்ணய்
கலைஞர் - கலய்ஞர்

நான் யாரய்யும் குறய்சொல்லவில்லய். எனக்குப் புரியவில்லய். தயவு செய்து விளக்கவும். ;)

Thursday, December 20, 2007

ப்ளாக்கரில் other option நீக்கம் ! பதிவர்கள் மகிழ்ச்சி !

மு.கு - சன் செய்திகள் போல வாசிக்கவும்.

ப்ளாக்கரில் other option மூலம் பின்னூட்டம் இடும் முறை நீக்கப்பட்டுவிட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு ப்ளாக்கரில் other optionல் பின்னூட்டம் இடுபவரின் பெயரையும், அவரது வலைப்பக்க முகவரியைச் சொல்வதற்கும் (Name, Website) இரண்டு Text boxகள் இருந்தன. இதனால் போலியாகப் பலபதிவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களது பெயரில் அவர்களது வலைத்தளமுகவரியையோ அல்லது அவர்கள் profile எனப்படும் பதிவர்ர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்ட்ம் போட்டுவிட்டு அந்த பதிவர்களுக்குத் தொல்லையும் சிரமமும் கொடுத்துவந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்பதிவர்கள் எலிக்குட்டி மற்றும் புகைப்பட சோதனைகளைக் கண்டுபிடித்து உலக ப்ளாக்கர் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பிடித்தனர். இருந்தாலும் இவையெல்லாம் தெரியாத பல புதிய பதிவர்கள் அந்த அப்பாவிப் பதிவர்கள் மேல் கோபம் கொண்டிருந்து அவர்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாமல் புறக்கணித்தும், பதிவுகளை Flag செய்தும் வந்தனர்.

இப்போது அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வகையிலும், தமிழ் வலைப்பதிவர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் ப்ளாக்கர் முடிவு செய்து other optionக்குப் பதிலாக இப்போது Nickname என்று ஒரே ஒரு text box மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் யாரும் யாருடைய வலைப்பக்க முகவரியையோ, பதிவர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்டம் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் "இது எப்போதோ செய்திருக்கவேண்டியது. சில வருடங்கள் முன்பே செய்திருந்தால் சில பல ரணகளங்களைத் தவிர்த்திருக்கலாம். எப்படியோ வரவேற்கவேண்டிய ஒன்று" என்றனர். மேலும் சில அனானிகளை அனானியாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது "தங்கள் புரட்சி தொடரும்" என்றும். "Nickname, Anonymous optionகளைக் கொண்டே பலரையும் கலாய்ப்பது தொடரும்" என்றும் தெரிவித்தனர்.

பொன்வண்டு - ஃபாதர் நியூஸ்

Thursday, August 16, 2007

பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? - ஒரு ஜாலி கற்பனை

சும்மா கலாய்ப்புக்குத் தான். நம்ம பதிவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தபோது தெரிந்தவை. ரெடி ஸ்டார்ட்.

பாலபாரதி - அடுத்த பதிவர் பட்டறையில் எந்தப் பத்திரிக்கையாளரையும் உப்புமா பேச்சுக்குக் கூப்பிடக்கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பொன்ஸ் - தன் profileல் போட நல்ல யானை படங்களை நெட்டில் தேடிக்கொண்டிருக்கிறார். ஓடிப்போன எலிக்குட்டியைப் பிடிக்க பல்கலைக்கழகம் முழுவதும் பொறி வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ரவிசங்கர் - விக்கிபீடியா, விக்சனரி, தமிழ்மணம் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறார்.

அபி அப்பா - கிடேசன் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு 49,50,51 என பின்னூட்டங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கால் மணி நேரமாகப் பின்னூட்டம் வராததால் கை நடுக்கம் ஆரம்பிக்கிறது அவருக்கு.

குசும்பன் - அடுத்து யாரைக் கலாய்க்கலாம் என்று லேப்டாப்பில் அர்னால்ட் படத்தையும், பதிவர்களின் படங்களையும் வைத்துக் கொண்டு, யார் தலையை அர்னால்ட் படத்தில் பொருத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் அபி அப்பாவின் படத்தைத் தேர்வு செய்கிறார்.

லக்கி லுக் - தன் கிழிந்து போன டவுசரை டெய்லர் கடையில் கொடுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறார். "என்னப்பா இவ்வளவு மோசமாக் கிழிஞ்சிருக்கு" என டெய்லர் கேட்க, "செருப்பால அடிப்பேண்டா, ஒழுங்கா வேலையைப் பாரு" எனப் பதிலளிக்கிறார்.

அய்யனார் - சீரியசாக யோசித்துக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் பதிவர் ஒருவர் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்.

இளவஞ்சி - பின்நவீனத்துவமாகப் பின்னூட்டம் எழுத, எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்.

வ.வா.ச - அடுத்து யாரை அட்லாஸ் வாலிபராகப் போடுவது என்று மெயிலில் டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது. தலயின் ரெக்கமெண்டுகளை சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் அப்ரசண்டுகள்.

கண்மணி - டீச்சர் எப்படா கேப்பு கிடைக்கும், கும்மியடிக்கலாம் என்று மைக்ராஸ்கோப்பினால் தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பல்லாம் அவருக்கு 'புலி'யோதரை .. சாரி .. புளியோதரை-ன்னாலே அலர்ஜியாம் !

செந்தழல் ரவி - கொரியாவில் எடுத்த பிகர் படங்களை லேப்டாப்பில் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

டோண்டு - சமீபத்தில் 1970ல் தான் பிறந்தநாள் கொண்டாடியதைப் பற்றிப் பதிவெழுத வேண்டும் என்று நினைக்கிறார்.

'டெக்' தீபா - மேடம் பிளாக்கிங்கில் PHD வாங்கிவிட வேண்டுமென்று கொலைவெறியோடு ஜாவா ஸ்கிரிப்ட் கோட் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

இராம் & இம்சையரசி - என்னோட சங்கம் தான் பெருசு என்று மாற்றி மாற்றிப் பின்னூட்டங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓசை செல்லா - அவரது வீட்டுக்குள் இருந்து ஊ ஆ என சத்தம் வருகிறது. வெள்ளை நிற உடையில் கராத்தே பழகிக் கொண்டு இருக்கிறார். அதைத் தனது கேமராவில் பதிவும் செய்கிறார்.

மாலன் - பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இனிமேல் எடுக்கக் கூடாது என்று துண்டைப் போட்டுத் தாண்டி சபதம் செய்கிறார்.

"போடுவார் மொக்கை என்றென்றும் அஃதிலார்
பதிவரல்லார் மொக்கை போடாதவர்" என்று ஒருவர் டைப்படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின் மண்டையில் பொளேர் என்று ஒரு அடி விழுகிறது. "what are you doing? Always reading blogs and typing in tamil. First I will tell the admin to block this blogger". அடி விழுந்தது எனக்குத்தான். கொடுத்தவர் என் மேனேஜர்.

Thursday, August 02, 2007

தமிழக அரசுப் பேருந்துகளில் பட்டையைக் கிளப்பும் 'போக்கிரி' !




கடந்த வாரம் ஊருக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் ஐந்து முறை பேருந்தில் பயணம் செய்ததில் மூன்று முறை 'போக்கிரி' படத்தைப் பேருந்துகளில் பார்க்க நேர்ந்தது.முதலில் சேலத்திலிருந்து மதுரை வரும் போதும், பின்னர் திரும்பும் போது இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரும் போதும், பின் மதுரை-ஓசூர் பேருந்திலும் பார்க்க வேண்டிய நிலை. இது போதாதென்று உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் ஞாயிறன்று மதியம் சிறப்புப் படமாக ஒளிபரப்பி மகிழ்வித்தார்கள்.

மதுரை-ஓசூர் பேருந்தில் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க கொஞ்ச நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது. ஏனென்றால் எல்லோரும் சொன்ன காரணம் "எத்தனை தடவைங்க இந்தப் படத்தைப் பார்ப்பது?. எல்லா பஸ்ஸிலும் இதைத் தான் போடுறாங்க".

ம். சரி. ஏதோ நமக்கு லாபம். நான் இதுவரை போக்கிரி படம் பார்க்கவில்லை. நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த விஜய் படம் 'காதலுக்கு மரியாதை'. மத்ததெல்லாம் பைசா செலவில்லாமல் உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் அல்லது இப்படி பேருந்துகளில் பார்த்தது தான்.

படம் பார்க்கும் போது 'லொள்ளு சபாவின் பேக்கிரி' வேறு ஞாபகத்திற்கு வந்து சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை வரவழைத்தது. தலைப்பிலிருந்து தொடங்குது இவர்கள் அட்டகாசம். 'பேக்கிரி - 100% ஒன்னுமில்ல'. படத்தை இவர்கள் நக்கலடிக்கவில்லை. ஐயோ பாவம் விஜய்யைத்தான்.

லொள்ளு சபாவின் பேக்கிரியில் சில காட்சிகள்.

ஜீவா (விஜய்) : ஏண்ணா! அந்தக் காலம் நம்பியார், அசோகன் படத்தில தான் பொம்பளைகளை வச்சு வில்லத்தனம் பண்ணுவாங்க. நீங்க என்னடானா இப்பவும் அதே மாதிரி பண்றீங்க?
சாமிநாதன் (குரு) : நீ கூடத்தான் ரொம்ப வருசமா ஒரே மாதிரி நடிச்சுக்கிட்டிருக்க.. நாங்க எதாவது சொல்றமா? வந்தா வந்த வேலைய மட்டும் பாரு!


ஜீவா அலிபாயைப் பார்க்க நடந்து வருகிறார்.
சேச்சு (அலிபாய்) : என்னடா, தமிழ், தமிழ்ன்னு ஓவரா பில்டப் குடுத்தீங்க .. சப்பையா நடந்து வர்றான்.
ஜீவா (விஜய்) : அண்ணா! பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாததால அப்புடி இருக்குங்கண்ணா! இப்போப் பாருங்கண்ணா .. பேக் கிரவுண்ட் மியூசிக்கோட எவ்வளவு பில்டப்பா வர்றேன்னு ..
(பேக் கிரவுண்ட் மியூசிக்குடன் ஸ்டைல் பண்ணிக் கொண்டே வருகிறார் ஜீவா)
சேச்சு (அலிபாய்) : புரிஞ்சிபோச்சு. பேக்கிரவுண்ட் மியூசிக், எபெக்ட் எல்லாம் இருந்தாத் தான் நீ தமிழு.. இல்லன்னா டுமிலு.


ஜீவாவை அடிக்க வில்லன்கள் வருகிறார்கள்.
ஜீவா (விஜய்) : நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
வில்லன் 1 : டேய்! உன் பேச்சை நீயே கேக்கலன்னா அடுத்தவன் எப்படிடா கேப்பான்?
வில்லன் 2 : அவ்வளவு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுறாண்ணே!


அப்புறம் விஜய் சண்டை போடும் போதும், பாடல் காட்சிகளிலும் வரும் போது, திரையரங்கில் ஆடியன்ஸ் தூங்குவது போலக் காட்டுவார்கள். விஜய் 'ஆடுங்கடா என்ன சுத்தி' பாட்டு பாடும் போது திரையரங்கில் எல்லோரும் எழுந்து வெளியே போவார்கள்.

ஜீவா : அண்ணா ! அண்ணா ! எங்கண்ணா போறீங்க?
பார்வையாளர் : இப்பத்தான் சண்டையை முடிச்ச.. அடுத்து எப்புடியும் பாட்டுத் தான். அதுக்குள்ள போய் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறோம்.
ஜீவா : அண்ணா ! அண்ணா ! இருங்கண்ணா ..
பார்வையாளர் : இருக்க முடியலன்னுதாண்டா போறோம்.. புரிஞ்சிக்கடா ..
ஜீவா : அண்ணா ! அண்ணா ! ப்ளீஸ்ண்ணா ..
பார்வையாளர் : என்னப்பா இந்தப் பையன் இந்த மாதிரி தொல்லை பண்றான். எல்லாரும் உக்காருங்கப்பா !
(எல்லோரும் தூங்குகிறார்கள்)

ஜீவா ஆடிப்பாடுகிறார்.

பார்வையாளர் : நிறுத்து.. நிறுத்து.. போன படத்துலயும் இந்த மாதிரி தான் பாட்டு பாடுன.. இந்த படத்துலயும் அதே பாட்டு தான் பாடுற.. ஏன் எப்பவுமே ஒரே மாதிரி பண்ற?
ஜீவா : எந்த பாட்டுன்னா?
பார்வையாளர் : எந்தப் பாட்டா? (சிவகாசியின் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடலைப் பாடுகிறார்)
ஜீவா : மெட்டு ஒன்னுதாண்ணா.. ஆனா பாட்டு வரியெல்லாம் வேற மாதிரி இருக்கில்ல?
பார்வையாளர் : டேய்! இதுக்குத் தாண்டா அப்பவே எந்திருச்சி வெளிய போறோம்னு சொன்னோம். நீ தாண்டா வலுக்கட்டாயமா எங்கள உக்காரச் சொன்ன..
ஜீவா : நீங்க போறதுன்னா போங்கண்ணா! நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். ஆடி முடிச்சிட்டுத் தான் விடுவேன்.
பார்வையாளர் : நீ ஆடுறதுன்னா ஆடு. எல்லாரும் தூங்குறது தூங்குறதுதான்.

இப்படி ஒரே ரகளை தான் பேக்கிரியில்.

அடடா! என்னமோ சொல்ல வந்து என்னமோ ஆகிருச்சே! உள்ளூர்த் தொலைக்காட்சியை விடுங்கள். பேருந்துகள் அதுவும் அரசுப் பேருந்துகளில் திருட்டு விசிடியில் என்ன தைரியத்தில் ஒரு புதுப் படத்தை ஒளிபரப்புகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை கலைஞர் டிவிக்கு 'போக்கிரி' படத்தின் ரைட்ஸ் எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? எது எப்படியோ அடுத்து சிவாஜி படத்தையும் இப்படி பேருந்துகளில் ஒளிபரப்பினால் ஒரு 50 ரூபாய் லாபம்.

லொள்ளு சபா பேக்கிரி YouTubeலும் இருக்கு. கொஞ்சம் சைடுல பாருங்கள்.

Thursday, July 26, 2007

விஜய.டி.ராஜேந்தரின் புதிய அவதாரம் !

தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் கலக்குவதால் தனது அடுத்த படத்தில் விஜய.டி.ராஜேந்தர் தனது கெட்டப்பை மாற்றி வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். இன்று அந்த கெட்டப்பின் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று கீழே.















Wednesday, July 25, 2007

கணினி ஓவியப் போட்டிக்கு எனது படம்

ஓவியமெல்லாம் அஞ்சாவது படிக்கிறப்ப 'வாழ்க்கைக் கல்வி' பாடத்துக்காக வரைஞ்சது. அதுக்கப்புறம் இப்பத்தான். அதுனால சின்னப்புள்ளத்தனமா கணினி ஓவியப் போட்டிக்கு ஒரு படம்.

தலைப்பு : மழையில் ஒரு பயணம்



Monday, June 11, 2007

இளையராஜா இசையில் Cheeni Kum இந்திப் படப் பாடல்கள்


நேற்று தான் (ரொம்பவே லேட்) அமிதாப்பச்சன் நடிப்பில் நமது இளையராஜா இசையமைப்பில் வெளிவந்திருக்கும் 'சீனி கம்' திரைப்படப் பாடல்களைக் கேட்டேன். நமது இளையராஜா இசையமைத்த பழைய பாடல்களின் மெட்டுக்களை வைத்து தற்போதைய இசையையும் இணைத்து அருமையாகப் பாடல்களை வடிவமைத்திருக்கிறார். இதுவரை ரகுமான் தான் இந்த மாதிரி செய்து வந்தார். அதாவது தமிழில் தான் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களிலேயே தான் இசையமைக்கும் இந்திப் படங்களுக்கும் பாடல்களை அமைத்துக் கொடுத்து வந்தார். இப்போது இளையராஜவும். ஆனால் பாடல்களில் மேற்கத்திய இசையையும் சேர்த்து இசையமைத்திருக்கிறார். இப்போது வட இந்தியர்கள் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களை நாம் இருபது வருடங்களுக்கு முன்பே கேட்டுவிட்டோம் என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

மெல்லத் திறந்தது கதவு படத்தின் 'குழலூதும் கண்ணனுக்கு' பாடலின் மெட்டில் ஒரு பாடலும், மௌனராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் இரு பாடல்களும் இசையமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 'விழியிலே' பாடலின் மெட்டில் ஒரு பாடலும் உள்ளன.

இந்தப் பாடல்களில், குழலூதும் கண்ணனுக்கு மெட்டில் அமைந்த 'பாத்தீன் ஹவா' பாடல் இடையில் அமிதாப் பேசும் வரிகளுடன் மிகவும் அருமையாக உள்ளது. 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் 'சீனி கம்', 'சூனி சூனி' பாடல்களும், 'விழியிலே' மெட்டில் 'ஜானே தோனா' பாடலும் நன்றாகவே உள்ளன.

எனவே தாமதிக்காமல் download செய்து கேட்டுக் கொள்ளுங்கள். பாடல் வரிகளுக்கும், படத்தின் தலைப்பிற்கும் அர்த்தம் புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்கலாம். :)

Monday, March 26, 2007

இம்சை இளவரசன் சோனி எரிக்ஸன்

வேலை பார்க்கிற இடத்துல இந்தப் பயபுள்ளைக மொபைல் போனை வச்சிக்கிட்டு நம்மளைப்படுத்துறபாடு இருக்கே சொல்லி மாளாது. அவய்ங்க பாட்டுக்கு செல்ல வைப்ரேட் மோடுல போட்டுட்டு டீ குடிக்கப்போயிர்றாய்ங்க. அது கிடந்து கதறி ஊரைக் கூட்டுது. ஏதோ ரைஸ்மில்ல இருக்கிற மாதிரி மொத்த கியூபிக்கிளும் அதிருது.

இன்னொரு பிறவி நம்மளோட வேலை பாக்குது. ஃபிரஷ்ஷர்-ஆ காலேஜ்ல இருந்து நேரா கம்பெனியில சேர்ந்தது. அவன் மொபைலுக்கு எப்போ கால் வந்தாலும் "கோ சார்லி.. கோ சார்லி"-னு எவனையோ போகச் சொல்லி அலறி நமக்கு கிலியைக் கிளப்புது. எதாவது மெசேஜ் வந்தா பழய புல்லட்ட ஸ்டார்ட் பண்ற மாதிரி சவுண்ட் வுட்டுட்டு "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யு ஹேவ் அ மெசேஜ்"-ங்குது. "ஏண்டா, சவுண்டைக் குறைச்சு வைக்கக் கூடாதா?" ன்னு கேட்டா "ஒரு கெத்து வேணுங்க.. நாம இருக்கோம்னு எல்லாருக்கும் தெரியணும்"குறான் அந்த கலரிங் மண்டையன்.

இன்னொரு மாமா இருக்காரு. கல்யாணமாகி பல வருசம் கழிச்சு புத்தி வந்து டெஸ்டிங் படிச்சுட்டு இப்போ நம்ம உயிரை வாங்குறாரு. அவரு புள்ளைக்கு டொனால்ட் டக் புடிக்குங்கிறதுக்காக ஒரு ரிங்டோன் வச்சிருக்காரு. அது டொனால்ட் டக் வாய்ஸ்ல "லலலாவோயே லலலாவோயே இய்யகககா.." ன்னு எப்பப் பாத்தாலும் காமடி பண்ணுது. அவரு புள்ளயோட சேந்து அவரும் டூன் டிஸ்னி பாத்து ரொம்பக் கெட்டுப்போய்ட்டாரு.

அடுத்து நம்மளுக்கு எதுக்க ஒரு அக்கா உக்காந்திருக்காங்க. அவுங்க எப்பப் பார்த்தாலும் சத்தமே வெளிய வராம யார்கூடவோ பேசிக்கிறாங்க. ரொம்ப வேலையிருந்தா இயர்போன் மாட்டிக்கிட்டு வேலை பாக்குறாங்க. உத்துக் கேட்டதுக்கப்புறம்தான் புரிஞ்சுச்சு சும்மா வெட்டியாத்தான் பேசுறாங்கன்னு. காலையில பொடுகு சாம்பு போட்டு குளிச்சதுல இருந்து இப்போ நகம் வெட்டிக்கிட்டிருக்குறது வரைக்கும் பேசுறாங்க.

சரின்னு நம்ம செல்ல எடுத்துப் பார்த்தா நல்லாத் தூங்கிக்கிட்டிருக்கு. கிட்டத்தட்ட கால் வந்தே ஒரு வாரம் ஆகிப்போச்சு. போரடிச்சுப்போய் செல்லே தூங்க ஆரம்பிச்சிருச்சி. மத்தியானம் சாப்பிட்டுட்டு தூக்கக் கலக்கத்தில இருக்கிறப்ப எதோ ஒரு பய புள்ளயோட மொபைல் அடிச்சிக்கிட்டே இருக்கு எடுக்கவே மாட்டேங்குறான். நானும் பொறுமை இழந்து போய் சத்தமாவே "எவண்டா அது எடுத்துத் தொலைங்கடா" ன்னேன். எல்லாரும் என்னைய முறைக்கிறாய்ங்க. எதுக்க உக்காந்திருக்குற அக்கா எந்திரிச்சி நகவெட்டிய என் முன்னால நீட்டுது. "ஹி ஹி. ஐ டோண் வாண்ட்" ன்னேன். "ப்ச். பிக் யுவர் மொபைல் மேன் இட்ஸ் ரிங்கிங்". ஓ அது என்னுதுதானா. காலே வராம ரிங்டோன் கூட மறந்துபோச்சு. மெதுவா எடுத்து "ஹலோ" ன்னேன்.

"குட் ஈவ்னிங் சார். வி ஆர் காலிங் ஃபிரம் ...கிளப் சார். வெரி கங்குராட்ஸ் சார். உங்க போன் நம்பர் எங்களோட லக்கி டிராவில செலக்ட் ஆகியிருக்கு சார். அதுனால உங்களுக்கு உங்க வொய்ப்போட கோவா போக பிரீ டிக்கட் தர்றோம் சார்". "அப்புடியா, இந்த ஆபருக்கு எவ்வளவு நாள் வேலிடிடி?"."ஏன் சார்". "எனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் கோவா போலாம்னு இருக்கேன்". "யு ஆர் நாட் மேரிட்? தென் யு கேனாட் அவாய்ள் திஸ் ஆஃபர் சார்". டொக். காதில் ரொய்ங்.

இந்தா அந்தான்னு பொழுதை ஓட்டிட்டு எப்படா ஆறு மணி ஆகும்கிறதையே ஆறு மணி நேரம் வேலையாப் பாத்துட்டு ஆறாகவும் ரூமுக்கு ஓடி வந்துட்டேன். உள்ள நுழைந்தவுடனே "தல வந்தாச்சு.தல வந்தாச்சு" ன்னு ஒரே அமர்க்களமாக்கெடக்கு. என்னடான்னு பாத்தா "உங்க செல்லக் குடுங்க. ஒரு கால் பண்ணிக்கிறேன். உங்களுது போஸ்ட் பெய்டு தான. ஏர்டெல் டு ஏர்டெல் பிரீ தான. குடுங்க" ன்னு புடுங்கிட்டான் ஒருத்தன். ரொம்ப நேரமா ஆளயே காணோம். "என்னங்க சார்ஜே போட மாட்டிங்களா. அதுக்குள்ள காலியாயிருச்சு. எதுக்குத்தான் நீங்க மொபைல் வச்சிருக்கீங்களோ"ன்னு ஒரு மணிநேரம் கழிச்சுக் கொண்டுவந்து கொடுத்தான். முடியல. செல்லுக்கு சார்ஜ் போட்டவுடனே வீட்ல இருந்து போன். "என்னடா எவ்வளவு நேரம் போன் பண்றது. எடுக்கவே மாட்டேங்கிற. யார் கூட பேசிக்கிட்டிருந்த". "இல்லம்மா. அது வந்து. சரிவிடுங்க. எதுக்கு போன் பண்ணீங்க". "சும்மாதான் என்ன பண்றன்னு கேட்கத்தான் பண்ணினேன். நீ பண்ற அக்கப்போர்ல நெனச்ச நேரத்துக்குக் கூட போன் பேச முடியல. நீயெல்லாம் எதுக்குத்தான் செல் வச்சிருக்கியோ". அம்மாவும் டொக்.

அன்னிக்கு ராத்திரி படுத்தா தூக்கம் வரவேயில்ல. அரைகுறைத் தூக்கத்தில யாரோ போன் பண்ணி நீ எதுக்கு செல் வச்சிருக்கன்னு கேட்கிறமாதிரி கனா வேற. டக்குன்னு முழிச்சி உக்காந்து நான் ஏன் செல் வச்சிருக்கேன்னு கண்டுபிடிச்சே ஆகணும்னு நானே என் மண்டையைத் தெறந்து எட்டிப் பாத்தேன். ஆறு மாசத்து முன்னால நடந்ததெல்லாம் வீடியோ பைலா ஸ்டோர் ஆகியிருந்துச்சு. டபுள் கிளிக் பண்ணி மீடியா பிளேயர்ல ஓப்பன் பண்ணிப் பாத்தேன்.

மொபைல் வாங்கணும் முடிவு பண்ணி ஷோரூம் போயி அங்க விலை கேட்டப்போ "பில் இல்லாம வாங்கினா அறுநூறு ரூபா கம்மி சார். பில்லோட வாங்கினா அதில போட்ருக்க வெல சார்". "அப்படியா ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்". "பில் இல்லாம வாங்கினா பில் தர மாட்டோம் சார். பில்லோட வாங்கினா பில் தருவோம் சார்". என்ன தெளிவான விளக்கம். "பில்லுக்கே அறுநூறு ரூபா கம்மியா. அப்படின்னா இந்த அட்டைப் பெட்டியெல்லாம் எங்களுக்கு வேணாம் இதையும் வச்சிக்கிட்டு ஒரு இருநூறு ரூபா டிஸ்கவுண்ட் கொடுங்க". அவன் முறைத்த முறைப்பில் "இல்லங்க அப்படி எதாவது ஆபர், ஸ்கீம் இருக்குமான்னு.. இல்லன்னா விடுங்க ஒன்னும் பிரச்சனையில்ல". வாங்கியாச்சு. செல்லுக்கு கவர் வாங்கணுமே. "இங்க வேணாண்டா இவன் 15 ரூபா சொல்றான். சரவணா ஸ்டோர்ல கம்மியா இருக்கும்"ன்னு நண்பன் சொன்னான். சரின்னு பத்து ரூபா செலவழிச்சு அங்க போயி அஞ்சு ரூபாய்க்கு ஜிப் கவர் வாங்கினது, அஞ்சு ரூபாய்க்கு காசு கொடுக்க அரைமணி நேரம் கியூவில நின்னது, கவுண்டர்ல இருந்தவன் "இது மட்டும்தானா இது மட்டும்தானா"ன்னு திரும்பத்திரும்பக் கேட்டது, பிறகு மகா கேவலாமா ஒரு லுக்கு விட்டு கவரை டெலிவரி கவுண்டர்க்கு எறிஞ்சது, நல்லவேள கிரடிட் கார்டு குடுக்காமத் தப்பிச்சோம்னு நினைச்சதுன்னு எல்லாம் ஞாபகம் வருது ஆனா ஏன் செல் வச்சிருக்கேன்கிறதுக்கு மட்டும் காரணமே கண்டுபிடிக்க முடியல. சரி விட்டுத் தள்ளு. தூங்கப்போவோம். காலையில சீக்கிரமா எந்திருக்கணும். இரு இரு. என்ன சொன்ன. கொஞ்சம் பின்னால வா. காலையில சீக்கிரமா எந்திருக்கணும். திரும்பிச் சொல்லு. தலைநகரம் வடிவேலு மாதிரி மூணு தடவ சொல்லு. சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும் சீக்கிரமா எந்திருக்கணும். கண்டுபிடிச்சிட்டேன்யா. கண்டுபிடிச்சிட்டேன். நான் ஏன் செல் வச்சிருக்கேன்னா..... அலாரம் வைக்கிறதுக்கு.

Friday, February 23, 2007

கண்களை ஏமாற்றும் 3D ஓவியங்கள்

அப்பாடா ஒரு வழியாக சரிபண்ணியாச்சு. எனது யாஹூ ஜியோசிட்டிஸ் அக்கவுண்டில் ஏதோ பிரச்சனை. போதுமான மெமரி ஸ்பேஸ் இருந்தும் ஏதோ சொல்கிறது. ஆகவே இப்போ போட்டோபக்கெட்டுக்கு மாறியாச்சு.

பிரச்சனையை நூல்பிடித்துச் சொன்ன பதிவர் சிந்தாநதிக்கு ஒரு ஸ்பெசல் 'ஓ'.

வெளிநாட்டில் ஒருவர் 3D முப்பரிமாண ஓவியங்களை சர்வசாதாரணமாக நடைபாதையில் வரைகிறாராம். ஓவியங்களில் நம் கண்ணை மறைக்கும் சில யுக்திகளைக் கையாளுகிறார். மின்னஞ்சலில் எனக்கு வந்த அந்தப் படங்களை கீழே கொடுத்திருக்கிறேன். ஏ.பா.பொ (ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்தருள்க). கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்.



பொட்டி ஒன்னு ரோட்டில கிடக்கு.. யாருமே கண்டுக்கல..



Photobucket - Video and Image Hosting





கோக் இருக்கு.. ஐஸ் எங்க?



Photobucket - Video and Image Hosting





நடைபாதையில் ஒரு ஆர்ட்டிக்



Photobucket - Video and Image Hosting





எடுத்துக்கோ.. எடுத்துக்கோ.. க்ரையான்ஸ் எல்லாம் எடுத்துக்கோ.



Photobucket - Video and Image Hosting





பெங்களூரில் இன்னும் கொஞ்ச நாள்ல



Photobucket - Video and Image Hosting





ஸ்பைடர் மேன் - 3



Photobucket - Video and Image Hosting





தி பேட் மேன் ரிட்டன்ஸ்



Photobucket - Video and Image Hosting





எல்லா நாட்லயும் EB-காரங்க இப்படித்தான் இருப்பாங்களோ



Photobucket - Video and Image Hosting





ஆத்தி... எத்தாத்தண்டி...



Photobucket - Video and Image Hosting





உக்காந்து யோசிப்பாய்ங்களோ?



Photobucket - Video and Image Hosting





அடப்பாவிகளா.. எல்லா ஊரிலயும் இதே கதை தானா.. சாக்கடையைத் திறந்தா மூடுங்கப்பா !



Photobucket - Video and Image Hosting




என்ன இது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு..



Photobucket - Video and Image Hosting





சும்மா கீழன்னாலும் விடுவோம். தமிழ்நாட்டுக்குத் தர மாட்டோம்.



Photobucket - Video and Image Hosting





இது எப்படின்னா....



Photobucket - Video and Image Hosting





இப்படித்தான்!



Photobucket - Video and Image Hosting





நம் கண்களை ஏமாற்றும் வேலையச் செய்தவர் இந்தப் புண்ணியவான் தான். பேரு ஜூலியன் பீவர்.



Photobucket - Video and Image Hosting



கலக்குறிங்க தல.

பி.கு: சிபி! உங்களாலதான் இந்தப் பதிவுல வரிசைஎண் குடுக்கல. ஏன்னா 'மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்' பதிவுல மொத்தமே 12 படங்கள் தான். ஆனா நீங்க 13வது படம் சூப்பர்னு பின்னூட்டம் போட்டதுனால.. நறநறநற :)

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர்,தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

Wednesday, February 21, 2007

நகைச்சுவைத் துணுக்கு: அமெரிக்கா vs ரஷ்யா

இது உண்மையோ, பொய்யோ தெரியாது. எனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் எடுத்து விட்டது. ஏ.கே.பொ. (ஏற்கனவே கேட்டிருந்தால் பொறுத்தருள்க.) அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி செயற்கைக்கோளில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்ய முடிவு செய்தது.

அப்போது அவர்களுக்கு ஒரு பிரச்சனை. என்னவென்றால் செயற்கைக்கோளில் உள்ள சர்க்கியூட்களைக் காகிதத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். ஆனால் விண்வெளியில்தான் ஈர்ப்புவிசை கிடையாதே!. பிறகு எப்படி பேனாவில் இருந்து மை கீழே இறங்கும்? எப்படி காகிதத்தில் எழுதுவது? ஆகவே இதற்கென சிறப்புப் பேனாவை அமைக்க குழு அமைக்கப்பட்டது. சில மாதங்களில் அவர்களும் விண்வெளியிலும் செயல்படும் பேனாவை வடிவமைத்தார்கள். விண்வெளிக்குச் சென்ற அமெரிக்க வீரர்களும் அந்தப் பேனாவை உபயோகித்தார்கள். அமெரிக்காவும் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டதாம்.

ரஷ்யாவும் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப முடிவு செய்தபோது இந்த விண்வெளியில் எழுதும் பேனாப் பிரச்சனை விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பேனாவுக்கென குழு எதுவும் அமைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் கொண்டு சென்றது பென்சில். :)

நன்றி : இ-கலப்பை,ப்ளாக்கர்,தமிழ்மணம் மற்றும் தேன்கூடு

Thursday, February 08, 2007

மின்னஞ்சலில் வந்த சிரிப்புச் சித்திரங்கள்

மின்னஞ்சலில் வந்த சில சிரிப்புச் சித்திரங்களை இப்பதிவிலே இட்டிருக்கிறேன். ஏற்கனவே பார்த்திருந்தால் பொறுத்தருள்க. பின்னூட்டம் கொடுப்பதற்கு கஷ்டப்படாமல் இருக்க, வசதியாக வரிசை எண் கொடுத்திருக்கிறேன். (சரி .. சரி.. விடுங்க. பின்னூட்டமெல்லாம் வருமுன்னு ஒரு நப்பாசைதான் :) )



1




2





3





4





5





6





7





8





9





10






11





12





நன்றி : இ-கலப்பை, ப்ளாக்கர் மற்றும் தமிழ்மணம்