Thursday, January 27, 2011

தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!


ஒருவரா இருவரா? இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு விட்டார்கள். முதலில் விடுதலைப்புலிகள் என்று நினைத்து சுட்டோம் என்றார்கள். இப்போது போர் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தால் இது தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே தவிர வேறென்ன?

கையாலாகத மாநில அரசையும், வேண்டுமென்றே கள்ளத்தனமாக மவுனமாக இருக்கும் மத்திய அரசையும் இனியும் மீனவர்களும், நாமும் நம்பியிருக்க வேண்டுமா?

எங்கள் ஈழச்சகோதரர்களை எல்லாம் அழித்தாகிவிட்டது. இன்னும் ரத்தவெறி கொண்டு திரியும் இலங்கைக்கு வேறு வகையில் ஆப்படிக்க வேண்டும். உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதிக்காவிட்டால் என்ன? நாம் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இலங்கைக்கு எந்தவிதத்திலும் மறைமுகமாக உதவமாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும்.

பின்வரும் எல்லாம் நம்மால் நிச்சயம் செய்ய முடியும் செயல்கள் தான்.

1. சுற்றுலாவிற்கு இலங்கையைப் புறக்கணிப்பது. உலகத் தமிழர்கள் யாரும் இலங்கைக்குச் சுற்றுலா செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். தன் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் இலங்கைக்கு இது நிச்சயம் பேரிழப்பு.

2. இலங்கையின் 'ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான சேவையைப் புறக்கணித்தல். மிக முக்கிய நிமித்தமாகச் செல்ல நேர்ந்தாலும் பிற விமானசேவை நிறுவனங்களை உபயோகித்தல்.

3. இலங்கை வங்கியைப் புறக்கணித்தல். சென்னையில் இருக்கும் இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள வேறு வங்கிகளுக்கு மாற்றுதல்.

4. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் 'ஶ்ரீலங்கன் ட்ரேட் சென்டர்' வணிக நிறுவனத்தைப் புறக்கணித்தல்.

5. இலங்கையிலிருந்து வரும் சிங்கள மாணவர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தராமல் புறக்கணித்தல்.

6. விரைவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குத் துவங்க இருக்கும் பயணிகள் கப்பல் சேவையைப் பயன்படுத்தாமல் இருத்தல். இது நாம் ஈழ, தமிழகத் தமிழர்களை வெறுக்கும் காங்கிரஸுக்கு வைக்கும் வேட்டு.

7. எந்த ஒரு இலங்கைத் தயாரிப்பையும் பயன்படுத்தாதிருத்தல்.

தமிழனமே ! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெட்கமில்லாமல் காங்கிரசைத் தேர்ந்தெடுத்தோம்! இப்போது நம் தமிழகத் தமிழர்கள் கொல்லப்படும் போதாவது சொரணையுடன் இருப்போம் !!

No comments: