
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் அடுத்த குற்றவாளியாகும் கொடுப்பினை மத்திய அமைச்சர் சரத்பவாருக்குக் கிடைக்கும் போலிருக்கிறது.
இன்று நீரா ராடியா சிபிஐ விசாரணையில் சரத்பவாரின் குடும்பத்தினர் தான் ஸ்பெக்டரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய 'டிபி ரியாலிட்டி' நிறுவனத்தை நடத்துகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இந்த சரத்பவார் தான் மத்திய அமைச்சர் பதவியை விட ஐசிசி தலைவர் பதவியைப் பெரிதும் விரும்பி தன் பணக்காரப் புத்தியைக் காட்டியவர். இன்றைய விலைவாசி உயர்வுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டிருக்கும் முட்டாள் அமைச்சர். வீணாகும் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லியபோதும், 'அதெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொல்லி, 'நாங்கள் என்ன உனக்கு யோசனையா சொல்கிறோம்? இது கட்டளை' என்று நீதிபதிகள் செவிட்டில் அறைந்தபின் தானியங்களை மாநில அரசின் பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கியவர்.

வயதானவர் என்பதற்காக இவர் செய்யும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளவா இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்?
அடுத்தபடியாக ராடியா கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கொடுக்கப்பட்டது குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார்.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் கவலையெல்லாம் அன்னா ஹசாரே கஷ்டப்பட்டு கொண்டுவரத் துடிக்கும் ஜன லோக்பால சட்டம் இந்தப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவேண்டும். அதைவிடுத்து எதிர்க்கட்சிகள் சரத்பவார் மேல் நடவடிக்கை எடு என பாராளுமன்றத்தை முடக்கிவிடுமோ என்பதுதான்.
ஜன லோக்பால் வரட்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகளும், நேற்று அரசியலுக்கு வந்த காளான்களும் தண்டிக்கப்படட்டும்.
No comments:
Post a Comment