சுப்பிரமணி : இன்னிக்கு நாம நிகழ்ச்சியில் சந்திக்கப் போற பதிவர் யாருன்னு உங்க எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். ஏன்னா ஏற்கனவே எல்லா நாடகத்துக்கு இடையிலயும் ad போட்டுக் காட்டிட்டாங்க. எனவே வெல்கம் ஒன் அன் ஒன்லி ஒன் மொக்கைப் பதிவர் கண்மணீய்ய்ய்ய்ய்ய்.
சுப்பிரமணி : வணக்கம் கண்மணி டீச்சர் !
கண்மணி : வணக்கம் ச்சுப்பிரமணி ! நீங்க எங்க வீட்டு நாய் மாதிரியே பேசுறீங்க. அதோட பேரும் ச்சுப்பிரமணி தான்.
சுப்பிரமணி : ஓ சூப்பர்! நம்ம நேரா பேட்டிக்குக் போகாம கொஞ்சம் சுத்து வழியில இப்போ போலாம். உங்களோட பொழுதுபோக்கு எல்லாம் என்னன்னு கொஞ்சம் சொல்றீங்களா?
கண்மணி : எனக்கு இருக்குறது எப்பவுமே ஒரே ஒரு பொழுது போக்குதான். அது வேலைக்குப் போறது.
சுப்பிரமணி : அப்போ உங்களோட ஃபுல் டைம் ஜாப் எது?
கண்மணி : பதிவு எழுதுறது.
சுப்பிரமணி : ஆமாம். நான் தான் மறந்துட்டேன். கும்மி, மொக்கைனா கூப்பிடு கண்மணியைங்கிற அளவுக்கு பதிவுலகில் பேர் வாங்கியிருக்கீங்க. இதுக்கெல்லாம் யார் காரணம் இந்த அளவுக்கு நீங்க பேர் வாங்குறதுக்கு நீங்க என்ன என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்கன்னு கொஞ்சம் விபரமா சொல்றீங்களா?
கண்மணி : முதலில் என் தலைமையில இயங்கும் பாசக்கார குடும்பம் என்கிற மக்கள் தொண்டு இயக்கத்துக்குத்தான் நன்றி சொல்லணும்.அவங்கதான் பதிவு போட்டவுடனே வரிசையாக் கியூ கட்டி நின்னு ஒவ்வொரு பின்னூட்டமாப் போட்டுத் தாக்கி என்னையே திக்குமுக்காட வச்சிருவாங்க. அப்புறமென்ன வழக்கம் போல கும்மிதான். ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறிக் கலாய்ச்சி பதிவை எங்கேயோ கொண்டு போய்ருவோம். இதுல என்ன வருத்தம்னா பதிவு போட்ட பத்து நிமிசத்துல 40 பின்னூட்டத்தைத் தாண்டி அடுத்த கட்டத்தை எட்டிரும் என்னோட பதிவுகள். அதுனால மத்தவுங்க படிக்கமுடியலைங்கிற வருத்தம் கொஞ்சம் இருக்கு.
அவ்வ்வ்வ்வ் எம்ஜியார் பாட்டுப் பாடி நாட்டுக்கு நல்ல சேதி சொன்னாரு நான் பதிவு போட்டு புவியை சூடாக்காதீங்க....மாம்பழம் சாப்பிடாதீங்க....ஜங்க் புட் சாப்பிடாதீங்க...அப்படின்னு எவ்ளோ நல்ல சேதி சொல்லியிருக்கேன்.
முதுமை வரமா சாபமா ன்னு மிரட்டியிருக்கேன்.நட்சத்திர வாரத்துல வாலை சுருட்டிகிட்டு நல்ல புள்ளையாட்டமா...பததிவு போட்டிருக்கேன்....அவ்வ்வ்வ்வ்
அதெல்லாம் விட்டுட்டு மொக்கை கும்மி மட்டும் படித்து என்னை மொக்கை ராணியாக்கிட்டீங்க. இந்த சதி வேலையின் சூத்ரதாரி அந்த மலேஷியா மாரியாத்தாதான்.
சுப்பிரமணி : சரி இப்படி கும்மிப்பதிவுகளுக்கு பதிவுலகக் கலாசாரக் காவலர் பதிவர்கள்கிட்ட இருந்து எதிர்ப்பு எதுவும் கிளம்பிருக்குமே?
கண்மணி : அப்படி எதுவும் கிளம்புறதுக்கு முன்னாடி நானே கும்மி ன்னு ஒரு பதிவை ஆரம்பிச்சி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வச்சாச்சு. முதலில் எல்லோரும் தமிழ்நாட்டின் பாரம்பரியக்கலையான கும்மியைப் பத்தின ஆராய்ச்சிப் பதிவுன்னு நினைச்சி என்னைப் பாராட்டி மின்னஞ்சலெல்லாம் அனுப்பி அவுங்களுக்குப் பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சி.
சுப்பிரமணி : அப்புறம் நீங்க வேற என்ன என்ன குழுப்பதிவிலெல்லாம் உறுப்பினரா இருக்கீங்க? அது பத்திச் சொல்லுங்க.
கண்மணி : ப.பா.சங்கம் அப்புறம் அனைத்து மொக்கை, கும்மிப் பதிவுகளிலும் ஆயுள் உறுப்பினர் நான்.
சுப்பிரமணி : பாப்பா சங்கம் என்னாச்சு? ரொம்ப நாளா பூட்டியே கிடக்குன்னு பேசிக்கிறாங்களே?
கண்மணி : அதெல்லாம் வடிகட்டாத பொய். சங்கம் ஏற்கனவே அபராதத்திலதான் ஓடிக்கிட்டிருக்கு. இபி பில், வாட்டர் பில், கட்டட வாடகைன்னு கட்டமுடியாம கரண்ட், தண்ணி, ஏன் கட்டடத்தையும் எடுத்துக்கிட்டாங்க. இதெல்லாம் ஆப் த ரெக்கார்ட். எடிட் பண்ணீருங்க. நிகழ்ச்சியில போட்டுறாதீங்க. அதுனால சேலத்துலயும், ஈரோட்டிலயும் கலை நிகழ்ச்சி நடத்தி சங்கத்துக்கு நிதி சேர்க்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் எதிர் சங்கம் கிளப்பி விடாத பொய்.
சுப்பிரமணி : அவரவர்க்கு அவரவர் ஆணி. வேறென்ன திட்டமெல்லாம் வச்சிருக்கீங்க. மக்களைக் கவருவதற்கு?
கண்மணி : அடுத்து கின்னஸ் புத்தகத்தில் கும்மியை இடம்பெற வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் போறோம். அதுக்காக 24 மணிநேரத்தில் 1லட்சம் பின்னூட்ட்ம் போட்டு சாதனை செய்யத் திட்டம் போட்டிருக்கோம். இதுக்காக இதில் ஏகப்பட்ட அனுபவம் உள்ள 'மீ த பர்ஸ்ட்' புகழ் மைபிரண்டிடம் இந்த வேலையை முடிக்க ஒப்பந்தம் போட்டிருக்கோம். அவர் அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியிருக்கிறார். இதன் மூலம் ப்ளாக்கர் சர்வரின் கெப்பாசிட்டியையும் சோதனை செய்ய முடியும் இல்லையா?
சுப்பிரமணி : அப்புறம் உங்கள் வழிகாட்டுதலில் நடக்கும் குட்டீஸ் பதிவு பத்தி சொல்லுங்களேன்.
கண்மணி : முதலில் டல்லா இருந்தாலும் குட்டீஸ் பதிவு தான் இப்போ டாப். சக பதிவர்களைக் கலாய்ப்பது முதல் புதுப் ப்து விளையாட்டுக்களை அறிமுகப்படுத்துவது வரை அவுங்க பதிவுகளாலும் , பின்னூட்டங்களாலும் நிறைய பதிவர்களுக்கு வியாபாரமே குறைஞ்சி போச்சுன்னு பேசிக்கிறாங்க.
சுப்பிரமணி : நீங்க இந்தப் பதிவுலகில் சந்தித்த பிரச்சினைகள் பத்திச் சொல்லுங்களேன்.
கண்மணி : பிரச்சினைன்னா பெரிசா ஒன்னும் இல்லை. இங்கிலீஸ்ல எழுதாதே, குட்டீஸ் பதிவுக்குப் பேர மாத்துன்னு ஒரு பிரச்சினை. அனானியாப் பின்னூட்டம் போட்ட கணினிப் புலவர் ரவிசங்கர் தான் தான் அந்த பின்னூட்டம் போட்டவர்னு ஒத்துக்கிட்ட போது அம்புட்டு நல்லவராயா நீங்கன்னு 'கோலங்கள்' கண்ணீர் வந்துடுச்சி. அப்புறம் பாப்பா சங்கப் பதிவுல ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ்ல புலி பின்னூட்டம் போட அதை வச்சி ஏகத்துக்கும் என்னை கலாய்ச்சிட்டாங்க. இதெல்லாம் டேக் இட் ஈசி யு நோ?
சுப்பிரமணி : வௌவால் பத்தி என்ன நினைக்கிறீங்க? ரொம்ப அப்புராணிப் பறவை இல்லையா?
கண்மணி : பெரிய தொல்லைங்க. குறுக்கும் மறுக்கும் பறந்து இம்சையா இருக்கு. அப்பப்போ கீச் கீச்னு சத்தம் வேற. மொதல்ல எங்க வீட்டு புகைக்கூண்டை கம்பி வச்சி அடைக்கணும். அங்கதான் தங்கியிருக்குதுங்க. ஆமா நீங்க இந்த வௌவால் பத்தித்தானே கேட்டீங்க?
சுப்பிரமணி : ஆமாமா. நானும் பறக்கிற வௌவாலைப் பத்தித்தான் கேட்டேன். ரொம்ப நன்றி கண்மணி. உங்களுக்கு எங்க நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதுக்காக ஒரு கும்மி நினைவுப் பரிசு. இதை உங்க பதிவுக்கு சைடிலே போட்டுக்கோங்க.
கண்மணி : போங்கய்யா உங்க பரிசும் நீங்களும்.ஏதோ பரிசுன்னு பார்த்தா லோகோவைக் குடுத்து பிலாக்குல போட்டுக்கச் சொல்லுவீங்க.அதைப் பாத்தாலே புதுசா வர்ரவங்க என்னமோ ஏதோன்னு மெரண்டு ஓடுறாங்க.... ஆளை விடு சாமி.வேணும்னா எங்க ச்சுப்பிரமணிக்கு ஏதாச்சும் பிஸ்கோத்து வாங்கிக் குடு போதும்..